← Back to list
நினைப்பதை விட GEN-Z கஷ்டம் !
Jun 10, 2025

செயற்கை நுண்ணறிவு இளையோரின் வாழ்க்கையை எளிதாக்கும் என்ற புரிதல் தவறானது!
BBC World Questions எனும், UK செய்தி நிறுவனம் ஒன்றின் விவாத நிகழ்ச்சி தயாரிப்பாளர், Charlie Taylor அவ்வாறு கூறியிருக்கிறார்.
1997 முதல் 2012ஆம் ஆண்டு வரை பிறந்த Gen Z தலைமுறையினர், தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி, உலகளாவிய நிலையற்ற சூழல், கோவிட் 19 பெருந்தொற்று உள்ளிட்டவற்றால், மாறுபட்ட சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
நவீன காலத்தில் பிறந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே, அவர்கள் பல துறைகளில் பன்முகத் திறன்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
இன்றைய சூழலில், ஒரே வேலையில் நீண்ட காலம் இருப்பது சாத்தியப்படாத ஒன்றாகிவிட்டது;
காலமாற்றத்திற்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால், எதுவும் நிரந்தரமில்லை என்ற நிலைக்கு மத்தியில், Gen Z தலைமுறையினர் சுமக்கும் பாரம், பலர் நினைப்பதை விட அதிகம் என அவர் சொன்னார்.
AI இன் தொடர் மாற்றங்களால், அவர்களை எதிர்கால தேவைகளுக்கேற்ப தயார் செய்வதே கடினமான ஒன்று என்பதை பலர் புரிந்துக் கொள்வதில்லை.
மற்றொரு பக்கம், COVID தொற்று GEN Z-யின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதும் கவனிக்கப்படாத ஒன்று என Taylor, FMTயிடம் கூறினார்.
----
சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது அரசாங்கம்!
அவ்வகையில் கனரக வாகனங்கள் தனது வேகத்தைக் கட்டுப்படுத்துவதை கட்டாயமாக்கும் விதமாக, புதிய கொள்கை ஒன்றை வரைந்து வருவதாக, போக்குவரத்து அமைச்சு கூறியது.
பேராக், Gerikகில் நேற்று 15 UPSI மாணவர்களைப் பலி கொண்ட விபத்தில், அவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வேகமாக சென்றுள்ளதைக் காவல் துறை கண்டறிந்துள்ளது.
----
இதனிடையே, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர், மருத்துவமனையிலிருந்து வெளியேறியதும் அவருக்குத் தடுப்புக் காவல் உத்தரவு வெளியிடப்படும்.
கைகளில் காயமடைந்துள்ள 42 வயதுடைய அவர், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறை தெரிவித்தது.
அவரிடமிருந்து வாக்குமூலமும் இன்னும் பதிவுச் செய்யப்படவில்லை.
----
கோலாலும்பூர், cheras-இல் இருக்கும் Alam Shah அறிவியல் இடைநிலைப்பள்ளியின் நிர்வாகக் கட்டிடத்தில், இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
அதில் ஆசிரியர் அறைகள், கோப்பு அறை மற்றும் ஆய்வுக்கூடம் பாதிக்கப்பட்ட நிலையில், உயிருடற்சேதம் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----
பஹாங், Temerloh-வில் நேற்று மாலை பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக மொத்தம் 75 வீடுகள் சேதமடைந்துள்ளன.
-----
பெர்லிஸ், கெடா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில், பிற்பகல் ஒரு மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather