← Back to list
ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தேவை !
Jun 04, 2025

Prasarana நிறுவனம் கீழுள்ள ரயில் நிலையங்களிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் !
போக்குவரத்து அமைச்சு அவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
ரயில் நிலையங்களின் platform-களில் பாதுகாப்பு கதவுகளை நிறுவுவதும் அதிலடங்கும் என அமைச்சு தெரிவித்தது.
நேற்று, சிலாங்கூர் Pusat Bandar Puchong LRT நிலைய தண்டவாளத்தில், வெளிநாட்டு ஆடவர் ஒருவர், தவறி விழுந்து உயிரிழந்தை அடுத்து, அமைச்சு அவ்வாறு கூறியது.
இனி வரும் காலங்களில், அதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாவதாக, அது மேலும் சொன்னது.
அச்சம்பவத்தை காவல்துறை விசாரித்து வருகிறது.
--------
சிலாங்கூர் Putra Heights எரிவாயு குழாய் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாநில அரசு வீட்டு வாடகை உதவியை நீட்டித்துள்ளது !
வீட்டு வாடகை உதவி ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த வேளை, அது தற்போது ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
--------
ஜோகூர், தங்காக்கில், 33 வயதான நபர், தனது மனைவியைக் கொலை செய்த சம்பவம், பழைய தகாராறுகள் மீண்டும் எழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்நபர் தற்போது, ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
---------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 19 மரணங்கள் பதிவாகின.
---------
தாய்லாந்தில் கடந்த இரண்டே நாட்களில் 28-ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather