← Back to list
FRU வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிக்கப்படுவர் !
May 27, 2025

பேராக் தெலுக் இந்தானில் நிகழ்ந்த விபத்தில் கொல்லப்பட்ட FRU கலகத் தடுப்பு வீரர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கண்காணிக்க, காவல்துறை பணிக்குழுவொன்றை அமைத்துள்ளது !
மோசடி செய்பவர்கள் போலி நிதித் திட்டங்களுடன், பாதிக்கப்பட்டவர்களை அணுகுவதாக வந்த புகார்களே அதற்குக் காரணம் என அத்துறை கூறியது.
இம்மாத மத்தியில் நடந்த அவ்விபத்தில் 9 FRU கலகத் தடுப்பு வீரர்கள் உயிரிழந்த வேளை, ஒன்பது பேர் காயமடைந்தனர்.
---------
சிலாங்கூர் Putra Heights எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான முழு அறிக்கை ஜூன் இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அச்சம்பவத்தில், அலட்சியக் கூறுகள் அல்லது குற்ற அம்சங்கள் குறித்த விசாரணையை, காவல்துறை நிறைவுச் செய்துள்ளது.
ஏப்ரல் தொடக்கத்தில் நடந்த அந்த தீ விபத்தில், பலர் காயமடைந்த வேளை, பல வீடுகள் சேதமடைந்தன.
-------
மலாக்கா AMJ நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்து தொடர்பில் கைதான, நின்று நின்று செல்லும் பேருந்து ஓட்டுநர், மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் !
அவ்விபத்தில், காரைச் செலுத்தி வந்த 23 வயது இளைஞன் உயிரிழந்தான்.
----------
ஜொகூரில், சாலை சேதத்தால் விபத்துக்குள்ளாகுபவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இழப்பீடு கோர முடியும் !
ஆனால், அதற்குத் தகுந்த ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
--------
ஹஜ் பெருநாளை நிர்ணயிக்க, இன்று பல இடங்களில் பிறை பார்க்கப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather