← Back to list
இந்தியா-பாக்: மலேசியாவின் யுக்தி !
May 09, 2025

இந்தியா- பாக்கிஸ்தான் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க, மலேசியா விவேகமான முறையில் செயல்பட வேண்டியது அவசியம்!
அணிசேரா வெளியுறவு கொள்கைகளை வரைந்து, சாதகமற்ற நிலைமையை சமாளிக்கத் தேவையான யுக்திகளை ஆராய்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார், அரசியல் ஆய்வாளர் எட்வின் மைக்கல்.
1971ஆம் ஆண்டு ஆசியான் நாடுகள் சேர்ந்து கையெழுத்திட்ட ZOPFAN கொள்கை, நம்மைப் பாதுகாக்க கைக்கொடுக்கும் எனக் கூறினார்.
இந்தியா போன்ற நாடுகளை அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பிற நாடுகளுடனும் மாற்றுப் பொருளாதாரக் கூட்டணி அமைத்து கொள்ளவும், அவர் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு சக்திகள் எந்த ஒரு வடிவிலும் ஆசியான் நாடுகளுக்குத் குறுக்கே வராமல் பாதுகாப்பதை, முதன்மை நோக்கமாகக் கொண்டதே இந்த ZOPFAN கொள்கை ஆகும்.
இதனிடையே, மற்ற ஆசிய நாடுகளுடன் பொருளாதார நல்லுறவை வலுப்படுத்திக் கொள்வது, உணவு பாதுகாப்பில் முதலீடு செய்வது ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறினார்.
எல்லாவற்றையும் பொதுவில் அறிவித்துவிட்டு அமுல்படுத்த வேண்டும் என்பதல்ல; மக்கள் நலனுக்காக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கிடையில் சில அந்தரங்க கலந்துரையாடல்கள் இருப்பதும் அவசியம், என்றார் அவர்.
இந்தியா பாக்கிஸ்தான் பிரச்னை குறித்து, பொதுமக்களிடம் பரவும் தவறான கண்ணோட்டங்களும் கருத்துகளும் கூட, சில தாக்கங்களை ஏற்படுத்தும்.
அதையும் ஒரு புறம் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்கிறார் மைக்கல்.
இந்நிலை சமுகத்தில் தவறான புரிதலையும் அதனால் சில சிக்கல்களையும் உருவாக்கும் அபாயம் இருப்பதால், தெளிவான அறிவுறுத்தல் மக்களுக்கு வேண்டும் என்கிறார்.
இந்தியா- பாக்கிஸ்தான் பதற்றம் உலகின் பல நாடுகளைப் பாதிக்கும் என அஞ்சப்படும் நிலையில், மலேசியா அத்தாக்கங்களிலிருந்து எவ்வாறு தப்பலாம் என்பது குறித்து கேட்கப்பட்டபோது, எட்வின் ராகா செய்தியிடம் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather