Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தீ விபத்து; இரு வாரங்களுக்குள் வாடகை தொகை !

Apr 11, 2025


தீ விபத்து; இரு வாரங்களுக்குள் வாடகை தொகை !

 

சிலாங்கூர், Putra Heights-சில் நடந்த எரிவாயு குழாய் தீவிபத்தைத் தொடர்ந்து, வீட்டு வாடகை உதவி பெறும் குடியிருப்பாளர்களின் பட்டியலை சிலாங்கூர் அரசாங்கம் இறுதி செய்து வருகிறது ! 

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அவர்களின் வங்கிக் கணக்குகளில், முதல் கட்டணப் பணம் போடப்படும் என மாநில Menteri Besar தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 500 ரிங்கிட், மடிக்கணினிகள், tablets-கள், புத்தக பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை, அதிகாரிகள் ஏற்கனவே விநியோகித்துவிட்டதாகவும், Menteri Besar கூறினார். 

----------  

இதனிடையே, அந்த தீ விபத்தில் முழுமையாக சேதமடைந்த 81 வீடுகளை, மீண்டும் கட்டுவதற்கான செலவை அரசாங்கம் ஈடுசெய்யும் என Syarikat Perumahan Negara Berhad தெரிவித்துள்ளது. 

இப்போதைக்கு, மீண்டும் கட்டப்படும் வீடுகளுக்கான வடிவமைப்பு குறித்து, SPNB முடிவு செய்யவில்லை. 

------- 

இவ்வேளையில், அந்த தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் மார்ச் மாத தண்ணீர் கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை !

Air Selangor அந்த விலக்களிப்பை வழங்கியது.

---------- 

இதனிடையே, அந்த தீவிபத்தின் போது உதவிய ஐந்து பாக்கிஸ்தானியர்களுக்கு அந்நாடு மரியாதை அளித்து கெளரவித்திருக்கிறது.  

அவர்களுக்கு மலேசியாவுக்கான பாக்கிஸ்தானிய உயர் ஆணையம் கெளரவச் சான்றிதழை வழங்கியது.

---------- 

இன்று அதிகாலையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 800-க்கும் மேற்பட்டோர், துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூரில் 200-க்கும் மேற்பட்டோர் PPS-சில் இருக்கின்றனர்.

----------- 

இவ்வேளையில், சிலாங்கூர் Shah Alam-மில் வெள்ளத்தால், மின்சாரம் தாக்கியதாக நம்பப்படும், வெளிநாட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்து் கிடக்க கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

அதே காரணத்தால் உயிரிழந்திருக்ககூடும் என அஞ்சப்படும் ஒரு நாயும், அந்த வெளிநாட்டு ஆடவரின் அருகில் கண்டெடுக்கப்பட்டது.

---------- 

மற்றொரு பக்கம், கெடா, பெர்லிஸ், பஹாங், கிளாந்தான், திரங்கானு, சபா, சரவாக்கில், இன்றிரவு 9 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என Met Malaysia தெரிவித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us