← Back to list
தீ விபத்து; உதவ முன்வரும் PERKESO !
Apr 02, 2025

சிலாங்கூர் Putra Heights-சில், எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 60 புகார்களை காவல்துறை பெற்றுள்ளது.
தமது தரப்பு, மேலும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பெறும் பணியில் இருப்பதாக, Subang Jaya காவல்துறை தலைவர் Wan Azlan Wan Mamat தெரிவித்துள்ளார்.
அந்த தீ விபத்து நிகழ்ந்த இடத்தின், பாதுகாப்பு நிலைகள் தொடர்பில், இன்று விசாரணை மற்றும் மதிப்பிடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
காவல்துறை, தீயணைப்பு மீட்புத் துறை, TNB, ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட அலுவலக பிரதிநிதிகள் என, 270-க்கும் மேற்பட்டோர் கொண்ட, இருபது நிறுவனங்கள் அதில் ஈடுபடவிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
இதனிடையே, அச்சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி, இன்னும் சிறிய தீ விபத்துகள் இருக்கலாம் என தீயணைப்பு துறை கூறுவதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தீயை அணைக்க, 6 பணியாளர்களுடன், தீயணைப்பு வாகனம் ஒன்று 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும் என அத்துறை கூறியது.
--------
மற்றொரு நிலவரத்தில், அத்தீச்சமபத்தால் பாதிக்கப்பட்ட கல்வியமைச்சின் கீழுள்ள பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியைப் பெறுவர்.
இதுவரை, 107 ஆசிரியர்களும், மாணவர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.
--------
இவ்வேளையில், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட PERKESO உறுப்பினர்களுக்கு, செல்லாத தன்மை திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
அத்திட்டம் என்பது, கடுமையான நோய்கள் அல்லது தீரா உடல் குறைபாடுகள் காரணமாக, வேலை செய்ய முடியாத தொழிலாளர்களுக்கு, நிதியுதவியை வழங்குவதாகும்.
-------
இதனிடையே, அவ்விபத்து காரணமாக வேலைக்குச் செல்ல இயலாத தொழிலாளர்கள், தங்கள் முதலாளிகளிடம், வேலை ஏற்பாடுகளில் தளர்வு வழங்க கேட்டு விண்னப்பிக்கலாம் என, மனிதவள அமைச்சு ஓர் அறிக்கை வழி தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather