← Back to list
ஐயாயிரம் ரிங்கிட் நிதியுதவி !
Apr 02, 2025

சிலாங்கூர், புத்ரா ஹயிட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிதியுதவு வழங்கப்படுகிறது!
மோசமாக சேதமடைந்த வீடுகளுக்கு ஐயாயிரம் ரிங்கிட்டும், மிகப்பெரியளவில் சேதமடைந்த வீடுகளுக்குத் தலா ஈராயிரத்து ஐநூரு ரிங்கிட்டும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
அத்தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கூடுதல் உதவிகளை வழங்கவும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போதையச் சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டவர்களின் பதற்றத்தை தணிப்பதுவுமே முக்கியம் என்று DSAI குறிப்பிட்டுள்ளார்.
-----
இதனிடையே அச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது!
ஆகக் கடைசி தகவல்படி, குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் இல்லை; பாதிக்கப்பட்ட அனைவரது உடல்நிலை சீராக இருப்பதையும் KKM உறுதி செய்தது.
எனினும் அவர்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தீப்புண் காயங்களுக்கு இலக்கானவர்கள் இருக்கின்றனர்.
அப்பகுதியில் வசிப்போரில் எவரேனும் உடல் நிலையில் மாற்றம் கண்டாலோ, தலைவலி, சுவாசக்கோளாறுகள் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, உடனடி சிகிச்சை பெறுமாறு் அவ்வமைச்சு கேட்டுக் கொண்டது.
------
மற்றொரு நிலவரத்தில், எரிவாயு குழாய் தீ விபத்தில், விமானங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அச்சம்பவம் நிகழ்ந்த உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுபாங் விமான நிலையத்தில் புறப்படவும், தரையிறங்கவும் இருந்த மானங்கள் மாற்று வழிகளுக்கு, திருப்பிவிட்டதாக அவ்வாணையம் விவரித்தது.
-----
அந்த தீ விபத்திற்கு, நிலத்தை தோண்டும் நடவடிக்கை தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் சாடல்கள் குறித்து காவல்துறை இன்று விசாரணையைத் தொடக்கவிருக்கிறது.
நேற்று முழுவதும் மீட்பு பணிகளில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு முன்னிருத்தப்பட்டதாக மாநில காவல் துறை தலைவர் தெரிவித்தார்.
------
சிலாங்கூர், செரி கெம்பாங்கானில் ஏற்பட்ட நிலச்சரவில் உயிருடற் சேதமோ வீடுகள் சேதமோ ஏற்படவில்லை!
தீயணைப்புத் துறையின் கண்காணிப்பு தொடரும் நிலையில் , பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார வாசிகள் பாதுகாப்பான பகுதிக்கு மாறிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-----
மியான்மார், நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஈராயிரத்து எழுநூரைக் கடந்துள்ளது!
நாலாயிரத்து ஐநூருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், குறைந்தது நானூற்று நாட்பது பேரைக் காணவில்லை.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather