← Back to list
பூச்சோங்கில் பற்றியெரியும் தீ !
Apr 01, 2025

சிலாங்கூர் Puchong Putra Height-சில், இன்று காலை பெரிய தீச்சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக, தீயனைப்பு மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
எரிவாயு குழாயில் தீ ஏற்பட்டதால், அச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தீப்பிழம்புகள் சில மீட்டர் தூரங்களுக்கு மேலே எழும்பியதை, வைரலாகி வரும் காணொலிகளில் காண முடிகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதிவாழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அச்சம்பவத்தால், அங்கு மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டிருப்பதாக TNB, அறிக்கை வழி தெரிவித்தது.
-----------
LRT நிலையங்களில், நியமிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்தைத் தாண்டி யாராவது அடியெடுத்து வைக்கும்போது, அதிகாரிகளை எச்சரிக்கும் அறியக்கருவி நிறுவப்படும் !
எம்ஆர்டி நிலையங்களில் உள்ளதைப் போலவே, Prasarana, பிளாட்ஃபார்ம் திரை கதவுகளையும் நிறுவத் தொடங்கும்.
அண்மையில், பார்வை குறைபாடுள்ள ஒருவர், Titiwangsa LRT நிலைய தண்டவாளத்தில் விழுந்து, ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததை அடுத்து, அம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
--------
கெடா BALING-கில், சில நாட்களுக்கு முன்புக் காணாமல் போன 4 வயது மதியிறுக்கம் கொண்ட சிறுவன், ஆற்றொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
-----------
மியான்மர் ஒரு வார கால துக்க தினத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 6-ஆம் தேதி வரை கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
அந்நாட்டில் 7.7 magnitude அளவில், வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டு, பல உயிர்கள் பறி போனதை அடுத்து, அந்நடவிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
அப்பேரிடரால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஈராயிரத்தைத் தாண்டியுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
-----------
இதனிடையே, அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்லாந்திலும், 19 பேர் மரணமடைந்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather