Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஒற்றுமைக்கான முயற்சி !

Mar 28, 2025


 

ஒற்றுமைக்கான முயற்சி !

மாணவர்கள் சீருடையில் தேசிய சின்னம் அணிவது மாணவர்கள் மீது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய பெற்றோர்-ஆசிரியர் சங்க ஒருமித்த மன்றம் PIBGN தலைவர், பேராசிரியர் Datuk Dr. Mohamad Ali Hasan கல்வி அமைச்சின் அம்முயற்சி குறித்து அவ்வாறு கூறியுள்ளார்.  

பல்வேறு இனத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே அம்முயற்சி ஒற்றுமையை வளர்க்கும் என அவர் சொன்னார்.   

-------- 

மற்றொரு நிலவரத்தில், கல்வி அமைச்சின் அம்முடிவை வரவேற்றுள்ளது தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP.  

அதோடு பெற்றோருக்குச் சுமையை அளிக்காமல் அக்கொள்கையைச் செயல்படுத்த, ஒவ்வொரு மாணவருக்கும் இரு இலவச Jalur Gemilang சின்னத்தை வழங்கும் கல்வி அமைச்சின் நடவடிக்கையையும் அது பாராட்டியது.  

வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி கழகங்களின் மாணவர்கள் Jalur Gemilang சின்னத்தை அணிய வேண்டும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்தது. 

--------

Madani நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு அனைத்து மலேசியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர்.   

வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கி 8 மாநிலங்களில் அந்த நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு நடைபெறும்.  

------- 

கிளந்தானில் பட்டாசுகளை உட்படுத்திய 23 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

அந்தச் சம்பவங்கள் அனைத்தும் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்களை உட்படுத்தியிருந்ததாக மாநில் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  

--------- 

அண்மையில் ஜொகூரின் 27 பகுதிகளைத் தாக்கிய வெள்ளம், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமானது என அம்மாநில மேயர் தெரிவித்துள்ளார்.  

இதனிடையே, ஆக கடைசி தகவல்படி, ஜொகூரில் 200க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

சபாவில் 34 பேர் உள்ளனர். 

--------- 

கெடா, பினாங்கு, பேராக், பஹாங், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை.  

அம்மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. 

-------- 

பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான முகநூல் பதிவு தொடர்பில் சுயேட்சை சமய சொற்பொழிவாளர் Zamri Vinoth கைது செய்யப்பட்டுள்ளார். 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us