Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சீருடையில் தேசியக் கொடி சின்னம் !

Mar 27, 2025


 சீருடையில் தேசியக் கொடி சின்னம் !

வரும் ஏப்ரல் 21 முதல், அனைத்து அரசாங்க கல்வி நிறுவனங்களின் கீழ் பயிலும் மாணவர்கள், தங்கள் சீருடையில் தேசியக் கொடியின் சின்னத்தைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.   

மாணவர்களிடையே ஒற்றுமை, ஒழுக்கம், நாட்டுப்பற்று உள்ளிட்ட பண்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் அது அமுலுக்கு வருவதாக கல்வி அமைச்சு கூறியது.  

இந்த அமுலாக்கம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும். 

அதோடு,  மாணவர்கள் தங்கள் விளையாட்டு உடை, புறப்பாட நடவடிக்கைகாக அணியும் ஆடைகளிலும் ஜாலூர் Gemilang சின்னம் இடம் பெற வேண்டும். 

------- 

கோலாலம்பூரிலிருந்து சீனாவின் Shenzhen நகருக்குப் நேற்றிரவு புறப்பட்ட மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கியது.  

நூற்று எழுபத்தியொரு பயணிகள் மற்றும் பணியாளர்களோடு பயணித்த அவ்விமானம், வலது எஞ்சினில் தீப்பிடித்ததை அடுத்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய்த்திற்கு அவசரமாக திரும்பியது. 

இவ்வேளையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக  தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

------- 

சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களின் காவல்துறை தலைமையகங்கள் இணைந்து OP Empat Penjuru எனும் சோதனை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.  

நோன்பு பெருநாள் காலக்கட்டத்தில் குற்றச் செயல்களைத் துடைத்தொழிக்க அந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

அச்சோதனை நடவடிக்கை நேற்று தொடங்கி அடுத்த மாதம் 6-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என காவல்துறை கூறியது.  

------- 

கோலாலும்பூர், Masjid India- விலுள்ள தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்றம் தொடர்பில், ஆலய நிர்வாகத்தினருக்கு இழப்பீடு வழங்குவதாக எந்த வாக்குறுதியும் வழங்கப்படவில்லை ! 

தீர்வு காண ஆலயத் தரப்புக்கு 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் அங்கிகாரம் வழங்கப்பட்டதாகவும் பகிரப்படும் தகவல் முற்றிலும் உண்மையில்லை என கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr Zaliha Mustafa தெளிவுப்படுத்தியுள்ளார்.  

இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் வீண் வதந்திகளைப் பரப்பாதீர் என எல்லா தரப்பினருக்கும் அமைச்சர் வலியுறுத்தினார்.  

-------- 

சிலாங்கூர் Sabak Bernamமிலுள்ள எரிப்பொருள் நிலைய கழிப்பறை்யில் புதிதாக பிறந்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  41 வயது மாதுவும் அவரது 18 வயதிலான மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

விசாரணைக்காக அவ்விருவரும் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

-------- 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us