← Back to list
ஜொகூரில் சீரடையும் வெள்ளம் !
Mar 24, 2025

ஜொகூரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது !
அங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சபாவில் ஐநூற்றுக்கும் அதிகமானோர், துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அதே வேளை, திரங்காணு மற்றும் கிளந்தானில் விடுக்கப்பட்டிருந்த கனமழை எச்சரிக்கையை, மலேசிய வானிலை ஆய்வு மையம் மீட்டுக் கொண்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட எச்சரிக்கையின் படி, அம்மாநிலங்களில் இன்று வரை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்நிலை மாறியுள்ளது என்றும், இனி வானிலை மேம்பட வாய்ப்பிருப்பதாகவும், அம்மையம் இன்று அறிக்கை வழி தெரிவித்தது.
-----------
இதனிடையே, கெடாவில் கூலிம் உட்பட சில பகுதிகளில் இன்றிரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் !
கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, பேராக்கிலும், அந்நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக, MET Malaysia தெரிவித்துள்ளது.
---------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,500-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 12 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
----------
நோன்புப் பெருநாள் விடுமுறையின் போது, மேற்குக் கரை விரைவுச் சாலையை 1 லட்சத்து நாற்பதாயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நெடுஞ்சாலையின் மேலும் சில பகுதிகள் திறக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.
---------
இதனிடையே, அப்பெருநாளை முன்னிட்டு, திரங்கானு அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசின் உதவியுடன், 500 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather