Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

JPJ அதிகாரிகளின் விடுப்பு முடக்கம் !

Mar 18, 2025


jpj அதிகாரிகளின் விடுப்பு முடக்கம் !

 

நாடு முழுவதும் உள்ள JPJ-வின் 2,500 அமலாக்க அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விடுமுறைகள் முடக்கப்பட்டுள்ளன.  

நோன்பு பெருநாளை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு நடவடிக்கை காரணமாக, அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 

மார்ச் 24 முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடத்தப்படும் அந்த சிறப்பு நடவடிக்கை, சாலை விபத்துகளின் விகிதத்தைக் குறைப்பதற்கான அமலாக்கம் மற்றும் விழிப்புணர்வை ஊக்குவித்தலில் கவனம் செலுத்தும் என JPJ தெரிவித்துள்ளது. 

குறிப்பாக கவனம் செலுத்தப்படும் முக்கிய குற்றங்களில், வேகம், இரட்டைக் கோடுகள் மற்றும் வரிசைகளில் முந்திச் செல்வது, அத்துடன் அவசர பாதைகளில் வாகனம் ஓட்டுவது ஆகியவை அடங்கும். 

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மார்ச் 29 மற்றும் 30, பின்னர் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், சரக்கு வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

பொதுப் போக்குவரத்து தொடர்பான குற்றங்களைக் குறைப்பதில், ரகசிய நடவடிக்கைகள், கடந்த காலங்களில் பெரிதும் உதவியிருப்பதால், விரைவுப் பேருந்து ஓட்டுநர்களின் ஓட்டுநர் பாணியைக் கண்காணிக்க, அந்நடவடிக்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

---------- 

இதனிடையே, நோன்பு பெருநாளின் போது காலையில் வானிலை சிறப்பாக இருக்கும் எனவும், மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதாக, KOSMO தெரிவித்துள்ளது. 

அந்த நிலை, மே மாதம் தொடக்கம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

--------- 

நாய்கள் தொல்லை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து, மற்ற குடியிருப்பாளர்களுக்கு, ஆபத்தை ஏற்படுத்தும் செல்லப்பிராணிகளை வைத்திருக்க தடை என்பதை, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு, பினாங்கு நகராண்மைக் கழகம் நினைவூட்டியுள்ளது ! 

செல்லப்பிராணி உரிமையாளர்கள், அறிவிக்கை கிடைத்த மூன்று நாட்களுக்குள், அத்தகைய விலங்குகளை அகற்றவில்லையென்றால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அக்கழகம் எச்சரித்துள்ளது.

--------- 

கெடா சுங்கை பட்டாணியில், உயர்கல்வி நிறுவனமொன்றில் பெண் மாணவி, தனது ஆண் நண்பரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. 

------- 

பினாங்கு பாலத்தில், மற்ற வாகனமோட்டிகளின் பாதுகாப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், மோட்டார்சைக்கிளில் Superman சாகசத்தில் ஈடுபட்ட இருவரை, காவல்துறை கைதுச் செய்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us