← Back to list
MACC-யுடன் பயணமாகும் Ismail Sabri !
Mar 15, 2025

முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob-பின் வாக்குமூலப் பதிவு, அடுத்த வார திங்கட்கிழமை தொடரும் !
ஊழல் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டு தொடர்பில், அவர் மூன்றாவது நாளாக திங்கட்கிழமை வாக்குமூலமளிக்க, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய தலைமையகத்திற்கு வருவார்.
கடந்த இரண்டு நாட்கள் , Ismail Sabri-யுடன் நடைபெற்ற வாக்குமூல பதிவு, சுமூகமாக இருந்ததாக MACC-யின் தலைமை ஆணையர் தெரிவித்தார்.
அவர் மீதான அக்குற்றச்சாட்டு தொடர்பிலான சோதனை ஒன்றில், அவருக்குச் சொந்தமான 170 மில்லியன் ரிங்கிட்டும், 16 கிலோ கிராம் எடையிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்புடைய 13 வங்கிக் கணக்குகளையும், MACC முடக்கியது.
2021 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, தனது ஆட்சியின் கீழ், விளம்பர நோக்கங்களுக்காக, கோடிக் கணக்கான ரிங்கிட்டுகளை செலவிட்டதன் தொடர்பில், இம்மாத தொடக்கத்தில் MACC, Ismail Sabri-யை விசாரித்தது.
---------
நோன்பு பெருநாளை முன்னிட்டு திறக்கப்பட்ட, ETS ரயில் சேவைக்கான 1 லட்சம் டிக்கெட்டுகள், விற்று முடியும் தருவாயில் உள்ளன.
இருபதே விழுக்காடு எஞ்சியிருப்பதாக, KTMB தெரிவித்துள்ளது.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை பயணத்துக்கான, 12,600 கூடுதல் டிக்கெட்டுகளும் அதிலடங்கும்.
---------
சிலாங்கூர் காஜாங்கில், பள்ளி மாணவனின் முக்கை குத்தி உடைத்த, அடையாளம் தெரியாத ஆடவன் கைதாகியுள்ளான்.
சாலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
-----------
பேராக் Teluk Intan-னில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற 13 நேப்பாள தொழிற்சாலை ஊழியர்கள் கைதாகியுள்ளனர்.
நேப்பாள ஆடவர் ஒருவர், வாகனமொன்றால் மோதப்பட்டு உயிரிழந்ததை அடுத்து, அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
----------
மலாக்காவில், இரண்டாம் படிவ மாணவன், பள்ளிச் சிற்றுண்டிச்சாலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather