← Back to list
பிறப்புச் சான்றிதழ் மோசடி !
Mar 13, 2025

பிறப்புச் சான்றிதழ் மோசடி விவகாரம் தொடர்பில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தேசிய பதிவுத் துறையின் செயல்முறைகளை ஆராயவிருக்கிறது!
கிள்ளான் பள்ளத்தாக்கிலும், ஜொகூரிலும் பிறப்புச் சான்றிதழில் மோசடி செய்த விவகாரம் தொடர்பில் அண்மையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் பொதுச் சேவை ஊழியர் ஒருவரும், டத்தோ ஸ்ரீ பட்டத்தை கொண்ட மருத்துவர் ஒருவரும் இருக்கின்றனர்.
பிறப்புச் சான்றிதழலில் போலியாக மலேசிய குடியுரிமை பெற்றுத் தரும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
----
அடுத்தாண்டிருலிருந்து தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகளைச் சேர்ந்த 70 விழுக்காட்டு மாணவர்கள், STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில் பதிந்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்!
வளர்ந்து வரும் நாடுகளில் இந்த STEM பாடங்களின் முக்கியத்துவம் உயர்ந்திருப்பதால், அத்துறைகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக, DSAI கூறினார்.
அதன் வழி, செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி மாற்றம், இலக்கவியல் தொழில்நுட்பம், சமூக ஊடகம் ஆகிய துறைகளில் நாட்டை மேம்படுத்த அது உதவும் என்றார் அவர்.
----
தாய்லாந்து, Sungai Golok-கில் நிகழ்ந்த அண்மைய குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, அந்நாட்டிற்கு அத்யாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கிளாந்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எல்லையில் இருப்போர், முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் அம்மாநில MB தெரிவித்தார்.
----
ஏப்ரல் 1 முதல், 2024 பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த, பேராக் மாநில சுகாதார துறை தயார் நிலையில் இருக்கின்றது.
----
நேற்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றை அடுத்து, தலைநகர் Masjid Jamek LRT நிலையத்தில் ஏற்பட்ட மின் திரை கோளாரை சரிச் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Rapid Rail தெரிவித்திருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather