Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சரக்கு லாரிகள் தடை !

Mar 11, 2025


சரக்கு லாரிகள் தடை !

நோன்பு பெருநாளை ஒட்டி நான்கு நாட்களுக்கு சரக்கு லாரிகள் சாலைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது! 

இம்மாதம் 29ஆம்,30ஆம் தேதி, அடுத்த மாதம் ஐந்தாம் மற்றும் ஆறாம் தேதிகள், அத்தடை அமலில் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். 

நோன்பு பெருநாளுக்கு முன்பும் பின்பும், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நெரிசலைத் தடுக்கும் தமதமைச்சின் முயற்சி அது என்றார் அவர். 

சீனப் புத்தாண்டு சமயத்தில் அமலுக்கு வந்த சில கட்டுப்பாடுகளின் பலனாக, கடந்தாண்டை விட இவ்வாண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பத்து விழுக்காடு குறைக்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறினார். 

-------  

Datuk Seri Ismail Sabri Yaakob-பை உட்படுத்திய ஊழல் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டு விசாரணைக்காக, மேலும் 23 சாட்சியாளர்கள் அழைக்கப்படவிருக்கின்றனர்! 

கடந்த வாரம் அந்த முன்னாள் பிரதமருக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்பட்ட மருத்துவரை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரித்தது. 

இஸ்மாயில் சப்ரி நாளை மறுநாள் MACCயிடம் வாக்குமூலம் அளிக்க அட்டவணையிடப்பட்டுள்ளது. 

------  

தாய்லாந்தில் நடந்த அண்மைய குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, பொது நடவடிக்கைக் குழு மலேசியா - தாய்லாந்து எல்லையில் கட்டுப்பாட்டை பலப்படுத்தவிருக்கிறது! 

அச்சபவத்துடன் சம்பந்தப்பட்ட கும்பல் மலேசியாவுக்குத் தப்பி ஓடுவதைத் தடுக்க அவ்வாறு செய்யப்படுகிறது. 

இருவரைப் பலி கொண்டு அந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அந்நாட்டுக்கு அத்யாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் மலேசியர்களை அறிவுறுத்தியிருக்கிறது. 

------  

மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கியதாக நம்பப்படும் மேலும்  26 மலேசியர்கள் காப்பாற்றப்பட்டு, இன்று மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! 

மியன்மார் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின்  உதவியோடு, அவர்களை தாயகம் கொண்டு வர எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக  தாய்லாந்துக்கான மலேசிய தூதர் தெரிவித்தார். 

கடந்த மாதம் அம்மோசடியில் சிக்கியதாக நம்பப்படும் 15 மலேசியர்கள் காப்பாற்றப்பட்டனர். 

------ 

தலைநகரில் உரிமம் இன்றி, அழகியல் அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வந்ததன் தொடர்பில் காவல் துறை ஒன்பது வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளது! 

வியட்னாம் பிரஜைகளான அவர்கள் அனைவரும், இரு அடுக்குமாடி குடியிருப்புகளில் அந்த வியாபாரத்தை நடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us