← Back to list
தாயை எரித்த மகன் கைது!
Mar 03, 2025

கெடா, அலோ செத்தாரில், தனது தாயைக் கொன்று தீயிட்டு எரித்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரைக் காவல் துறைை தடுத்து வைத்துள்ளது!
அவரை இன்று தொடங்கி ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
43 வயதுடைய அந்த சந்தேக நபர் மனநலப் பிரச்னையுடையவர் என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
-----
சிலாங்கூர், Kajangகில் நபர் ஒருவரை காரால் மோதிக் கொலை செய்ய முயற்சித்ததன் பேரில், வயதான தம்பதி ஒன்று கைதாகியிருக்கிறது!
லாரி ஓட்டுனரான அந்நபர் மீது கொண்ட அதிருப்தியால், அந்த 73 மற்றும் 65 வயதுடைய ஜோடி அச்செயலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
-----
நோன்பு கூட்டங்களை முடிந்தளவு எளிமையாக வைத்துக் கொள்ளும்படி அமைச்சுக்களும், அரசாங்க அமைப்புகளும் அறிவுறுத்தப்படுகின்றன!
இந்த புனித ரமலான் மாதத்தில் தேவையில்லா செலவீனங்களையும், விரையத்தையும் தவிர்க்கும்படி பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்.
------
இதனிடையே, நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா நாளை இரண்டாம் வாசிப்புக்கு விடப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
-----
ஜொகூரில் ரமலான் அல்லது Aidilfitri சந்தைகளில் வெளிநாட்டு வியாபாரிகள் கண்டறியப்பட்டால், அவர்களின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்!
குறிப்பாக, வணிகத் தளத்தை வாடகைக்கு எடுத்து, அதனை வெளிநாட்டு வணிகர்களுக்கு வாடகைக்கு விடுவோர் பிடிப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என, மாநில வீடமைப்பு செயற்குழு தலைவர் எச்சரித்துள்ளார்.
------
தனது ஆட்சியின் கீழ் இலக்கவியல் நாணயத்திற்கான ஆதரவை அமெரிக்க அதிபர் Donald Trumph வெளிப்படுத்தியிருப்பதை அடுத்து, Crypto நாணையங்களின் விலையில் அதிரடி உயர்வு தென்படுகிறது!
விரைவில் அமெரிக்காவை Crypto நாணையங்களின் தலைநகரமாக மாற்ற அவர் உறுதிப்பூண்டுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather