← Back to list
நீரில் மூழ்கியே உயிரிழந்தது !
Feb 28, 2025

கிளந்தான், Tanah Merah-வில் 19 மாத ஆண் குழந்தை காணாமல் போய், சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், குற்ற அம்சங்கள் எதுவுமில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.
நீரில் மூழ்கியே அக்குழந்தை உயிரிழந்தது, பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
ஆனாலும், அச்சம்பவத்தில் அலட்சியக் கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க, இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக அத்துறை கூறியது.
திங்கட்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட அக்குழந்தை, புதன்கிழமை ஆற்றங்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.
----------
இதனிடையே, கெடா சுங்கை பட்டாிணியில், படிவம் ஐந்து மாணவன் உயிரிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய, காவல்துறை, ஆய்வுக்கூடம் அறிக்கைக்காக காத்திருக்கிறது
சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த குறுக்கோட்டத்தில் பங்கேற்ற அம்மாணவன், 6 கிலோமீட்டர் ஓட்டத்தை முடித்து, இறுதிக் கோட்டை அடைந்தவுடன் சரிந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.
----------
நாட்டில் காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது !
அதற்குத் தீர்வு காண உடனடி, ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாதுகாப்பான சமூகத்துக்கான கூட்டமைப்பின் தலைவர் Tan Sri Lee Lam Thye தெரிவித்துள்ளார்.
----------
கல்வி அமைச்சின் புதிய வரலாற்று பாடத்திட்டம் 2027 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்புதிய பாடத்திட்டத்தில், தற்போதுள்ள அரசியல் அம்சங்களை சமநிலைப்படுத்த, கலாச்சார, சமூக, கலை, விளையாட்டு வரலாறு உள்ளிட்ட கூறுகளும் இணைக்கப்படும்..
----------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 11 மரணங்கள் பதிவாகின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather