Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கடனுதவிக்கு ஆவணம் அவசியம்!

Feb 26, 2025


கடனுதவிக்கு ஆவணம் அவசியம்!

படம்: பெர்னாமா 

அரசாங்கத்தின் கடனுதவிகளைப் பெறவிரும்பும் வர்த்தகர்கள், தகுந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்! 

மக்கள் பணமே கடனுதவி வடிவில் கொடுக்கப்படுவதால், அதற்கு பெறுநர்கள் தகுதியுடன் இருப்பது நிச்சமயம் உறுதிச் செய்யப்படும் என, தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 

"சிலர் கூறுவது என்னவென்றால், அரசாங்கம் எந்த கடனுதவிகளுக்கும் ஆவணங்கள் அதிகம் கேட்கிறது. ஆம், மக்களின் வரிப்பனம் பொதுமக்கள் வளர்ச்சி நிதியாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அதற்குத் தகுந்த ஆவணம் இருத்தல் மிகவும் அவசியம். அது தான் அரசாங்கம் வைத்திருக்கும் கணக்கு. ஆவணம்  இன்றி நெறியற்ற முறையில் அரசாங்கத்தால் உதவி செய்ய இயலாது" என்றார் அவர்.

அதே சமயம் ஹலால் சான்றிதழைப் பெறுவதில் இந்திய தொழில்முனைவோர் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தாம் நன்கறிவதாக ரமணன் தெரிவித்தார். 

வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஹலால் சான்றிதழைப் பெற, Bank Rakyatடின் கீழ் ஆலோனைகளும் வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

"கடனுதவிக்கு விண்ணப்பித்துவிட்டு, வங்கியிடம் செல்லலாம். அவர்கள் இலவசமாகவே எவ்வாறு ஹலால் சான்றிதழைப் பெறுவது என்பது குறித்து உங்களுக்கு விளக்கமளிப்பார்கள்", என்றார் துணை அமைச்சர்.

இதனிடையே BRIEF-I எனப்படும் Bank Rakyat இந்திய நிதியளிப்புத் திட்டத்தின் கீழ், இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு மேலும் பத்து கேடி ரிங்கிட் நேற்று வழங்கப்பட்டது.

உள்ளூர் இந்திய தொழில்ம்முனைவோரின் வளர்ச்சிக்கு அரசாங்கம் காட்டும் கடப்பாட்டின் பிரதிபலிப்பாக இது அமைகிறது என, துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

 

கடனுதவிக்கு ஆவணம் அவசியம்!

 

கடந்தாண்டு Brief-i திட்டத்தின் கீழ் ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய தொழில்முனைவோரிடையே அந்நிதிக்கான தேவை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது அந்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக ரமணன் கூறினார். 

நேற்று தலைநகரில் நடந்த Brief-I மாதிரி காசோலையை விநியோகிக்கும் நிகழ்வுக்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் துணை அமைச்சர் அவ்வாறு பேசினார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us