← Back to list
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; 14 ஆண்டுகள் சிறை !
Feb 25, 2025

கடந்தாண்டு தனது மனைவிக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபருக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய 6 பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.
கைத்துப்பாக்கி வைத்திருந்தது உட்பட 7 குற்றச்சாட்டுகளுக்கு அத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
அச்சம்பவம் தொடர்பில் அந்நபர் மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியுள்ளார்.
அவர் தனது மனைவியை கொலை செய்ய முயன்றது, அப்பெண்ணின் தனிப்பட்ட பாதுகாவலரை கடுமையாகக் காயப்படுத்தியது ஆகியவையே அவ்விரண்டு குற்றச்சாட்டுகளாகும்.
------------
உத்தேச நகர்ப்புற புதுப்பித்தல் மசோதா நில உரிமையாளர்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்காது என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
அந்த மசோதா நகர்ப்புற மறுமேம்பாட்டிற்கு உதவுமே தவிர, சொத்துரிமையை பாதிக்காது என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
அம்மசோதா, ஏழை சமூகங்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற செய்யும் என்ற கவலைகளுக்கு மத்தியில், அவர் அவ்வாறு கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
-----------
கடந்தாண்டு சிலாங்கூரில், 386.4 மில்லியன் நட்டத்தை உட்படுத்திய, ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இணைய மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக, மாநில MB Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், அது 2023-ஆம் ஆண்டில் பதுவான சம்பவங்களை விட குறைவே என்றாரவர்.
------------
பேரரசர் மற்றும் ஆட்சியாளர்களைப் பற்றி, சமூக ஊடகங்களில் தவறான உள்ளடக்கத்தைப் பதிவேற்றிய முதியோருக்கு, முப்பதாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
----------
கிளாந்தான் PASIR MAS-சில், விருந்தினர் ஒருவரிடமிருந்து 2,500 ரிங்கிட் பணத்தைத் திருடிய மாதுவுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather