← Back to list
மத பாகுபாடு சட்ட மசோதா தேவையில்லை!
Feb 18, 2025

இன பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் மாதிரியான புதிய கொள்கைகளை வகுக்க வேண்டிய அவசியம் இல்லை!
பல்லின மக்களின் நல்லுறவைப் பாதுகாக்க ஏதுவான நடப்புச் சட்டங்களின் அமுலாகத்தை வலுப்படுத்தினாலே போதும் என கருதுகிறார், ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang.
நாட்டின் ஒற்றுமையைப் பாதிக்கும் விதமாக நடந்துக் கொள்ளும் யாராக இருந்தாலும், தண்டனைச் சட்டம் மற்றும் 1984 அச்சகம் மற்றும் வெளியீட்டுச் சட்டம், 1998 தொடர்பு பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ், சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என அவர் எச்சரித்தார்.
அண்மையில் சிலாங்கூர், செப்பாங்கில் சோள வியாபாரி ஒருவர் இந்தியர்களை அவமதிக்கும் கருத்தை வெளியிட்டது, பொதுமக்களிடையேவும் அரசியல் தலைவர்களிடையேவும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வியாபாரி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
-----
மலேசியாவில் இணைய குற்றங்கள் குறிப்பாக இணைய மோசடிகளின் எண்ணிக்கை கடந்த மூன்றாண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது!
இக்காலகட்டத்தில் 1.5 பில்லியன் ரிங்கிட் நட்டத்தை உட்படுத்திய, 35 விழுக்காட்டுக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இது புகார் கொடுத்தவர்களுடைய தரவு மட்டுமே; மோசடியில் ஏமாந்து புகார் கொடுக்காதவர்களையும் உட்படுத்தினால், நட்ட மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என, அவ்வமைச்சு கூறியது.
------
சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன!
அதன் ஒரு பகுதியாக, வீட்டு சிறை சட்ட மசோதா மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
------
முந்தைய ஈராண்டுகளைக் காட்டிலும், இவ்வாண்டு நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சரிவு காணப்படுகிறது!
2023றில் 11 ஆயிரத்து 700 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிந்துக் கொண்ட நிலையில், அவ்வெண்ணிக்கை கடந்தாண்டு 11 ஆயிரத்து ஐநூராகவும், இவ்வாண்டு 11 ஆயிரத்து 21ஆகவும் பதிவானதாக மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் SS பாண்டியன் ராகா செய்தியிடம் தெரிவித்தார்.
------
பஹாங், பெக்கான் மற்றும் ரொம்பீனிலும், ஜொகூர் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கியிலும் இன்று மதியம் இரண்டு மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என MET Malaysia கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather