← Back to list
தகுதியானவர்களுக்கு மட்டுமே மானியம் !
Feb 03, 2025

இலக்கிடப்பட்ட மானியங்கள், தகுதியானவர்களுக்கு மட்டுமே சென்று சேர வேண்டும் !
அரசாங்கத்தின் நிதி நிலையை வலுப்படுத்தக் கூடிய, அந்த மானிய முறையை, மாட்சிமை தங்கிய மாமன்னர் Sultan Ibrahim வரவேற்றுள்ளார்.
ஆயினும், அது தகுதியானவர்களுக்கு மட்டுமே, விரைவாகவும் திறமையாகவும் வழங்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
15-ஆவது நாடாளுமன்றத்தின், 4-ஆம் தவணைக்கான முதலாம் கூட்டத் தொடரை தொடக்கி வைத்த போது, மாமன்னர் அவ்வாறு கூறினார்.
--------
அண்மையில், சிலாங்கூர் கடற்கரையொன்றில், இந்தோனேசிய பிரஜை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது !
அதனை உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதாகியதாக அவ்வமைச்சு கூறியது.
அந்த சம்பவம், போதைப்பொருள் அல்லது ஆயுதங்கள் கடத்தலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என காவல்துறை கூறுவதாக, அமைச்சு சொன்னது.
--------
மின்சாரக் கட்டணம் 14 விழுக்காடு உயர்த்தப்படும் எனக் கூறப்படுவதை பிரதமர் மறுத்துள்ளார்.
ஜூலையில் அமலுக்கு வரும் அதன் புதிய கட்டணம், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், சிறிதளவிலான அதிகரிப்பாகத் தான் இருக்கும் என அவர் கூறினார்.
---------
வெள்ளத்தால் சரவாக்கில் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, சபாவில் 155 பேர் PPS-சில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
சரவாக்கில் சில பகுதிகளில், நாளை தொடங்கி, நாளை மறுநாள் வரை தொடர் மழை பெய்யலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
--------
ஜொகூரில், குடும்பத் தகறாரால் தனது மனைவியின் காரை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் நபரை காவல்துறை வலைவீசி வருகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather