← Back to list
வீட்டுக்காவல் தொடர்பான சட்டம் !
Jan 31, 2025

கைதிகளை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்கும் மசோதா, இவ்வாண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு, வீட்டுக் காவலில் வைக்கும் கொள்கையை முதலில் அமல்படுத்த உள்ளதாக, உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த மசோதா, தடுத்து வைக்கப்படுள்ளவர்கள் அல்லது குறைவான வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், கடுமை குன்றிய குற்றங்கள் புரிந்தவர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
---------
சபா கல்வித் துறை, SPM மாணவர்களுக்கான Ops Payung திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மாணவர்கள், அந்த தேர்வை எழுதுவதை பாதிக்காமல் இருப்பதை உறுதிச் செய்ய, அத்திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள SPM மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------
இதனிடையே, சபா, சரவாக்கில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பேரிடரால் சிக்கியுள்ள அவர்கள் அனைவரும், வெள்ள துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
-----------
நாடு முழுவதும் நேற்று மட்டும், ஆயிரத்துக்கு மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 15 மரணங்கள் பதிவாகின.
-------
அமெரிக்க Jet விமானமும், அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather