Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தமதமைச்சு தலையிடவில்லை !

Jan 10, 2025


தமதமைச்சு தலையிடவில்லை !

 

பள்ளிப் பேருந்து கட்டண உயர்வில், போக்குவரத்து அமைச்சு தலையிடவில்லை!

அதனை உறுதிப்படுத்திய அதன் அமைச்சர் Anthony Loke, அந்த கட்டண உயர்வு குறித்து, பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பேருந்து நடத்துனர்களும் முடிவு செய்வார்கள் என கூறினார். 

பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு அடிப்படையில், கட்டண உயர்வு ஒரு மாணவருக்கு 5 ரிங்கிட்  முதல் 10 ரிங்கிட் வரை இருக்கும். 

டீசல் மானியம் இருந்தபோதிலும், வாகனங்களின் உபரி பாகங்களின் விலை அதிகமாக இருப்பதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக, மலேசிய பள்ளி பேருந்து நடத்துநர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

--------- 

பினாங்கில் கடந்தாண்டு, மரம் விழுந்து உயிரிழந்த  இரண்டு சீன சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினர், 5 தரப்பினர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அவர்கள், ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீடும் கோரியுள்ளனர். 

அவ்வைந்து தரப்பினர்களில், சம்பவம் நடந்த வளாகத்தின் நடத்துநர், மற்றும் உரிமையாளரும், பினாங்கு நகராண்மைக் கழகமும் அடங்கும். 

---------- 

Negeri Sembilan, Nilai-யில் உள்ள உணவகமொன்றில், பானம் அருந்திக்கொண்டிருந்த நால்வரை, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பாராங்கத்தியைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 

அச்சம்பவம் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. 

------- 

மலாயா பல்கலைக்கழகம், தனது வளாகத்தில் பல பூனைகள், தெரு நாய்களால் கொல்லப்படுவதாக கூறப்படுவதை அடுத்து, அதனின் வருகையை கையாளவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 

--------- 

இந்தியா புபனேஸ்வரில் நடைபெற்ற 18-ஆவது பிரவாசி பாரதிய டிவாஸ் மாநாட்டில், மலேசியா-இந்தியா இலக்கவியல் மன்றம், MIDC அதிகாரப்பூர்வத் தொடக்கம் கண்டுள்ளது. 

நமது நாட்டின் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மற்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு இடையேயான அதிகாரப்பூர்வச் சந்திப்பைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் தொடக்கம் கண்டிருக்கிறது. 

அமையப்பெற்றிருக்கும் MIDC மன்றமானது, இலக்கவியல் வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் துறைசார் வல்லுனர்களின் பரிமாற்றம் என, இருநாட்டு இலக்கவியல் துறையை இயக்கத் தயாராக உள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us