← Back to list
சமூக ஊடகத்தில் வயது முக்கியம்!
Aug 14, 2024

image credit: RNZ
 
சமூக ஊடகங்களில் வயது குறித்துப் பொய் சொல்வது தவறு!
குறிப்பாக பெற்றோர் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு சமூக ஊடக கணக்குகளைப் பதியும் போது, வயதை மாற்றிப் போடுவது ஒரு குற்றம் என, மலேசிய இணைய பயனர்கள் சங்கத் தலைவர் நினைவூட்டுகிறார். 
பிள்ளைகளை சமூக ஊடகங்களிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது ஒரு மிகப்பெரிய தடை. 
இந்த மாதிரியான பொருப்புகள் அரசாங்கத்தைச் சேறாது; அது முழுக்க முழுக்க பெற்றோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஒன்று என, அவர் Sinar Harian-னிடம் தெரிவித்தார். 
---------  
சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் விதிக்கும் முறை, இணைய மோசடிகள் ஏற்படும் பட்சத்தில் அதன் தொடர்பில் தகவல்களைத் திரட்ட அதிகாரிகளுக்கு உதவும் என, Cybersecurity Malaysia கூறுகிறது. 
இதற்கு முன் ஒரு குற்றச்செயல் நடந்தால், வெளிநாட்டில் அலுவலகம் வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட சமூக ஊடகத் தளத்திடமிருந்து, விசாரணைக்குத் தேவையான விவரங்களைத் திரட்ட அதிகாரிகளுக்கு கடினமாக இருக்கும். 
தகவல்களைக் கொடுக்குமாறு உத்தரவிடவும் மலேசியாவுக்கு அதிகாரம் இல்லை. 
இந்நிலையில், புதிய உரிமமானது, அத்தளங்களை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வைப்பதோடு, அவற்றை மீறும் நிறுவனங்களின் சேவையைத் தடைச்செய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இருக்இருக்கும் என அது Sinar Harian-னிடம் கருத்துரைத்தது. 
-------- 
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பிறப்பு விகிதம் பத்து புள்ளி இரண்டு விழுக்காடு சரிந்துள்ளது! 
கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஒரு லட்சத்து எழுநூரு பிள்ளைகள் குறைவாக பிறந்துள்ளன. 
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 47 குழந்தைகளும்,ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரத்து நூற்று 19 குழந்தைகளும் பிறப்பதாக, புள்ளி விவரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
---------
சுதந்திர மாதத்தை ஒட்டி தேசிய கொடியைப் பறக்கவிடுவோர் அதனை சரியான முறையில் செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்! 
அண்மையில் பேராவில் சங்கம் ஒன்று Jalur Gemilang கொடியை தலைகீழாகப் பறக்க விட்டதை அடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டி, தொடர்புத்துறை அமைச்சர் அந்த நினைவூட்டலை வழங்கினார். 
கொடியை தலைகீழாகவோ அல்லது வேறெந்த தவறான வழியிலோ பறக்க விடுவது சட்டத்திற்கு எதிரானது என அவர் கூறினார், 
-------- 
அனைத்துலக தனியார் பங்கு நிறுவனம் போல் நடித்து மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புக்கிட் ஆமான் விசாரணையைத் தொடக்கியுள்ளது! 
அம்மோசடியால் கிட்டத்தட்ட இரண்டு கோடியே 20 லட்சம் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளது. 
---------
சபா தாவாவில் தனது 13 வயது காதலியைக் கொன்றதாக 14 வயது சிறுவன் மீது உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather