Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலும் அதிகமான உதவிகள்!

Sep 06, 2021


மேலும் அதிகமான உதவிகள்!

மக்களுக்கு மேலும் அதிகமான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருக்கிறார்.

அந்த உதவிகள் வாயிலாக வழங்கப்படும் தொகை பெரிதாக இல்லாமல் இருக்கலாம்.

ஆயினும் அது நடப்புச் சூழலில் சுமையை ஓரளவாவது குறைக்க உதவும் என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

இன்று முதல் Covid-19 உதவித் திட்டத்தின் கீழ் மக்கள் கட்டங் கட்டமாகத் தொகையைப் பெறுகின்றனர்.

கிட்டதட்ட 10 மில்லியன் பேர் பலனடையும் அத்திட்டத்திற்காக 3.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகமான உதவிகள்!

நாட்டில் மேலும் 272 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 18 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 17 ஆயிரத்து 352 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிலாங்கூரைப் பின்னுக்குத் தள்ளி இம்முறை சரவாக்கில் மிக அதிகமாக மூவாயிரத்து 714 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்து சிலாங்கூரிலும் ஜொகூரிலும் தலா ஈராயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் அதிகமான உதவிகள்!கிள்ளான் பள்ளத்தாக்கிலும் சரவாக்கிலும் பதிவாகியுள்ள தினசரி Covid-19 மரணங்கள், 24 மணி நேரத்தில் நிகழ்ந்தவை அல்ல.

சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே நிகழ்ந்து, கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பதிவானவை என அவர் சொன்னார்.

மேலும் அதிகமான உதவிகள்!80 விழுக்காட்டுப் பெரியவர்களுக்கு Covid-19  தடுப்பூசி முழுமையாகப் போடப்பட்டதும், இளையோருக்குத் தடுப்பூசி செலுத்த மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என Khairy கூறினார்.

அதில் 16 மற்றும் 17 வயதுடைய இளையோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதே சமயம் அது தடுப்பூசி கையிருப்பைப் பொருத்து அமையும் என அமைச்சர் சொன்னார்.

மேலும் அதிகமான உதவிகள்!பள்ளி நேரடி வகுப்புகள் SPM, STPM, STAM போன்ற முக்கியத் தேர்வுகளுக்கு அமரும் மாணவர்களுக்கு முதலில் திறக்கப்பட வேண்டும் என UKM விரிவுரையாளர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

தேசிய மீட்சித் திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் உள்ள மாநிலங்களுக்கு அது பொருந்தும்.

அதே சமயம் முக்கியத் தேர்வெழுதும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள், சிற்றுச்சாலை நடத்துனர்கள், பாதுகாவலர்கள், பள்ளிப் பேருந்து ஓட்டுனர்கள் ஆகியோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதோடு, இரண்டாவது தடுப்பூசி செலுத்தி இரு வாரங்களைக் கடந்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather