Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உருமாறிய Delta - அதிகமான சம்பவங்களுக்குக் காரணம்!

Aug 06, 2021


உருமாறிய delta - அதிகமான சம்பவங்களுக்குக் காரணம்!

நாட்டில் தற்போது உருமாறிய Delta வகை கிருமித் தொற்றை உட்படுத்திய Covid-19 சம்பவங்கள்தான் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. 

சுகாதார துணைத் தலைமை இயக்குனர் Datuk Dr Hishamshah Mohd Ibrahim அவ்வாறு தெரிவித்தார்.

அதே சமயம் இம்மாத இறுதி வாக்கில் Delta வகை கிருமித் தொற்று தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடலாம். 

இருப்பினும் லபுவானில் தடுப்பூசி போடும் பணிகள் ஆக்ககரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அங்கு குறைந்து வருவதாக அவர் சொன்னார்.

உருமாறிய delta - அதிகமான சம்பவங்களுக்குக் காரணம்!

தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்று மற்றும் நான்காம் கட்டங்களுக்கான நகர்வு, மோசமான அறிகுறிகளுடன் பதிவாகும் Covid-19 சம்பவங்களைப் பொருத்தே இனி அமையும். 

3, 4, 5 ஆம் நிலைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, தீர்மானக் குறியீடாக இருக்கும் என தேசிய மீட்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன் தினசரி சம்பவங்கள், தேசிய மீட்சித் திட்டத்தின் அடுத்தக் கட்ட நகர்வின் தீர்மானக் குறியீட்டாக இருந்தன. 

உருமாறிய delta - அதிகமான சம்பவங்களுக்குக் காரணம்!

மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் சுமையைக் குறைக்க, மலேசிய ஆயுதப்படை தனது வீரர்களையும் தேவையான உபகரணங்களையும் முறையாகத் திட்டமிட்டு நகர்த்தவிருக்கிறது. 

Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டி துணைப்பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு கூறினார். 

மக்களின் சுகாதாரத்தை உறுதிச் செய்ய சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான ஒத்துழைப்பும் தொடருப்படுவதாக தற்காப்பு அமைச்சருமான அவர் சொன்னார்.   

உருமாறிய delta - அதிகமான சம்பவங்களுக்குக் காரணம்!

வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள Covid-19 நோயாளிகள் MySejahteraவில் Home Assessment Tool அம்சத்தைப் பயன்படுத்தி தங்களது சுகாதார நிலையின் ஆகக் கடைசி நிலவர்த்தைத் தெரியப்படுத்த வேண்டும். 

அதன் வழி சம்பந்தப்பட்டவர்களை மெய்நிகர் வாயிலாக தங்களால்  கண்காணிக்க முடியும் என சுகாதார அமைச்சு கூறியது.   

உருமாறிய delta - அதிகமான சம்பவங்களுக்குக் காரணம்!நாடு முழுவதும் இதுவரை 2 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகமான முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கிட்டதட்ட 80 லட்சம் பேர் இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.

அதே வேளை பெரியவர்களில் 34.2 விழுக்காட்டினர் முழுமையாக இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

நேற்று ஒருநாளில் 5 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather