Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கோவிட்-19: 257 பேர் உயிரிழந்தனர்!

Aug 04, 2021


 

கோவிட்-19: 257 பேர் உயிரிழந்தனர்!

நாட்டில் இன்று கோவிட் 19 தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஆக அதிகமாக 257ஆகப் பதிவாகியுள்ளது!

இதையடுத்து பலி எண்ணிக்கை 9855ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இன்று பதிவாகிய கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது!

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று புதிதாகப் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 819ஆக் உயர்ந்துள்ளது.

சிலாங்கூரில் எட்டாயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

KLலில் ஈராயிரம் சம்பவங்களும், ஜொகூர், கிளாந்தான் மற்றும் கெடாவில் முறையே ஆயிரத்துக்கு அதிகமான சம்பவங்கள் பதிவாகின.

----- 

நெகிரி செம்பிலான் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைய வேண்டுமென்றால், அம்மாநிலத்தில் பதிவாகும் தினசரி கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கையும், அத்தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைய வேண்டும்!

தவிர தடுப்பூசி திட்டமும் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் என மாநில MB தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலானில் இன்று 800 புதிய சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தில் 41 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசியை போட்டு முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

---- 

இதனிடையே நெகிரி செம்பிலான், Tampin-னில் மேற்கொள்ளப்பட்டு வரும் Outreach நடமாடும் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 368 முதியோர்கள் தத்தம் வீடுகளில் இருந்த படியே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தடுப்பூசி பெறுவதிலிருந்து எந்த வர்கத்தினரும் தவறக் கூடாது என்ற நோக்கத்திற்காகத் தொடங்கிய அத்தடுப்பூசி திட்டம், சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் S வீரப்பன் தெரிவித்தார்.

---- 

கிளாந்தானில் கடந்த இரு வாரங்களாக சிறார்களை உட்படுத்திய கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் விதமாக இருப்பதாக Kota Baruவிலுள்ள தனிமைப்படுத்துதல் மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளர்.

அம்மாநிலத்தில் சிறார்களை உட்படுத்திய சம்பவங்கள் 25லிருந்து 30 விழுக்காடு வரை உயர்ந்திருப்பதாக அவர் சொன்னார்.

----- 

தமக்கு பெரும்பான்மை இருப்பதால் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin திட்டவட்டமாக அறிவித்துள்ளார்!

இன்று காலை மாமன்னருடனான சந்திப்பின் போது அதற்கான ஆதாரத்தை தாம் சமர்ப்பித்ததாக அவர் சொன்னார்.

என்றாலும், அடிக்கடி தமது பெரும்பான்மை குறித்து சில தரப்புகள் கேள்வி எழுப்புவதால், வரும் செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் அதனை தாம் நிரூபிக்க போவதாக Tan Sri Muhyiddin கூறினார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather