Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அதிவேகமாக தடுப்பூசி போடும் நாடாக மலேசியா திகழ்கிறது!

Jul 28, 2021


அதிவேகமாக தடுப்பூசி போடும் நாடாக மலேசியா திகழ்கிறது!

கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 1 கோடியே 83 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன!

இதையடுத்து கோவிட் 19-னுக்கான தடுப்பூசியை அதிவேகமாகப் போடும் நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்வதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் Khairy Jamaludin தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில் ஆக அதிகமாக ஐந்து லட்சத்து 53 ஆயிரத்து 871 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அவற்றுள் மூன்று லட்சத்து 56 ஆயிரம் முதல் டோசும், ஒரு லட்சத்து 97 ஆயிரம் இரண்டாம் டோசும் அடங்கும் என Khairy சொன்னார்.

----

தடுப்பூசி போட்டு முடித்தவர்களுக்கு சுகாதார அமைச்சு தடுப்பூசி அட்டையை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை!

கடந்த மார்ச் மாதம் செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சு பயன்படுத்திய தடுப்பூசி அட்டையும் QR குறியீடும், செய்தியாளர்களுக்குக் காட்டுவதற்கான மாதிரிகள் மட்டுமே என்பதை அமைச்சு தெளிவுப்படுத்தியிருக்கிறது.

---- 

சிலாங்கூரில், தமக்கு எந்த வகை தடுப்பூசி போடப்பட்டது என்ற குழப்பத்தை அடுத்து நிருபர் ஒருவர் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

அவரது ஒப்புதல் படிவம் மற்றும் தடுப்பூசி சந்திப்பு அட்டை ஒவ்வொன்றும் வெவ்வேறு தடுப்பூசியைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

-----

உலகம் முழுவதும் இதுவரை மொத்தம் 195 மில்லியன் கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

ஆக அதிகமாக அமெரிக்காவில் 34.5 மில்லியன் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இந்தியாவில் 31.4 மில்லியன் சம்பவங்களும், Brazilலில் 19.6 மில்லியன் சம்பவங்களும் பதிவானதாக John Hopkins பல்கலைக்கழகத்தின் ஆகக் கடைசி தரவு காட்டுகிறது.

----- 

Hepatitis C எனப்படும் கல்லீறல் வீக்க நோயை 2030ஆம் ஆண்டில் முற்றாக அழிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கை அடைவதில் மலேசியா முன்னோக்கி செல்கிறது!

இந்த பெருந்தொற்று காலத்தில் கடும் சவால்களைச் சந்தித்தாலும், கல்லீறல் அழற்சியைக் கையாளும் மலேசியாவின் முயற்சி தொடர் முன்னேற்றம் கண்டு வருவதாக சுகாதார தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

நடப்பில் கல்லீறல் அழற்சிக்கு ஆளான உலக மக்களில் 10லிருந்து 15 விழுக்காட்டினருக்கு மட்டுமே அந்நோய்க்கு சிகிச்சை பெறும் வசதி உள்ளது;

அந்த வசதியைப் பெற மலேசியாவும் தொடர்ந்து பல்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டு வருவதாக Hisham சொன்னார்.

“ஹெபடைடிஸ் காத்திருக்க முடியாது” என்ற கருப்பொருளில் இன்று உலக கல்லீறல் அழற்சி தினம் அணுசரிக்கப்படுகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather