Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

SME-களுக்கு உதவிகள் வழங்கப்படும்- பிரதமர்!

Jul 25, 2021


 

sme-களுக்கு உதவிகள் வழங்கப்படும்- பிரதமர்!

கோவிட் 19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு அரசாங்கம் உதவவிருக்கின்றது!

இந்த பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்த SMEக்களில் பாதி பேர் வியாபாரத்தை மூட வேண்டிய சூழ்நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குழைந்துவிடும் என அச்சம் தெரிவித்த பிரதமர், இச்சூழலில் SMEக்கள் நிலைமையைச் சமாளிக்க ஏதுவான உதவிகள் வழங்கப்படும் என்றார்.

தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முழுமை பெற்றதும், SMEக்களின் வியாபாரங்களுக்கு மறுஉயிர் கொடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் எடுக்கும் என்றாரவர்.

---- 

கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நேற்று நான்கு லட்சத்து 17 ஆயிரத்து 738 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன!

அவற்றுள் 2 லட்சத்து 84 ஆயிரம் முதல் டோசும், 1 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமான இரண்டாம் டோசும் அடங்கும்.

இதையடுத்து நேற்று வரை 1 கோடியே 69 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் ஒட்டு மொத்தமாக போடப்பட்டுள்ளன.

---- 

கோவிட் 19-னுக்கான இரு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டு முடித்தவர்களுக்கான, தளர்த்தப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகள் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது!

உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணுதல், விளையாட்டு மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குதல் ஆகியவையும் அவற்றிலடங்கும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்துள்ளார்.

தூரமாக இருக்கும் தம்பதிகள் மாநிலம் கடக்கவும் அனுமதி கொடுக்கப்படலாம்.

---- 

கோவிட் 19-னுக்கான இரு டோஸ் தடுப்பூசியையும் போட்டு முடித்தவர்களுக்கு அஙகீர்கரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.

அச்சான்றிதழை வழங்கும் முறை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என தொடர்பு மற்றும் பல்லூசக அமைச்சு கூறியிருக்கின்றது.

இப்போதைக்கு தடுப்பூசி போட்டு முடித்தவர்கள் MySejahtera செயலியில் கொடுக்கப்படும் இயங்கலை சான்றிதழை மட்டுமே பயன்படுத்த முடியும் என அது தெளிவுப்படுத்தியது.

---- 

தொடர்ந்து இரண்டாவது நாளாக  மலேசியாவில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று ஆக அதிகமாக 15 ஆயிரத்து 902 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

அதில் ஏறக்குறைய பாதி சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவானவை.

----- 

நெகிரி செம்பிலான், செரம்பானிலுள்ள பெரியச் சந்தை நாளை தொடங்கி ஏழு நாட்களுக்கு மூடப்படுகிறது.

அச்சந்தையில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளில் 64 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather