Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

15 ஆயிரத்தைத் தொட்டது கோவிட்!

Jul 23, 2021


15 ஆயிரத்தைத் தொட்டது கோவிட்!

நாட்டில் முதல் முறையாக புதிதாக பதிவாகிய கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியிருக்கின்றது!

இன்று 15 ஆயிரத்து 573 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் ஆக அதிகமாக ஏழாயிரத்து 672 பேருக்கு அத்தொற்று பீடித்துள்ளது.

Kl-லில் ஈராயிரத்து 63 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

அத்தொற்றுக்கு 144 பேர் பலியாகியுள்ளனர்.

----

மாநில மக்களில் குறைந்தது 40 விழுக்காட்டினராவது முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு தான், பேராக் மாநிலம் தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும்.

மாநில MB அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரையிலான நிலவரப்படி 10.8 விழுக்காட்டினர் தான் இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்; 

32.25 விழுக்காட்டினர் முதல் டோசைப் போட்டிருப்பதாக அவர் சொன்னார்.

----

I Citra திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற ஊழியர் சேம நிதி வாரிய சந்தாதாரர்களுக்கு வரும் ஆகஸ்டு இரண்டாம் தேதி தொடங்கி கட்டங்கட்டமாக தொகை கொடுக்கப்படும்.

வங்கிகளைப் பொருத்து அப்பணம் ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் சென்று சேரும் என KWSP தெரிவித்துள்ளது.

----

KL, சிலாங்கூர், Putrajaya ஆகியவற்றிலுள்ள தடுப்பூசி போட இன்னும் தேதி கொடுக்கப்படாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆகஸ்டு ஒன்றாம் தேதி தொடங்கி தடுப்பூசி போடப்படும்!

அவர்கள் அத்தேதியிலிருந்து Walk in முறையில் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என Khairy சொன்னார்.

அதற்காக திறக்கப்படும் தடுப்பூசி மையம் எங்குள்ளது என்பது மீதான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றாரவர்.

---- 

கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் இனி அதனை வீடியோ எடுக்க அனுமதி வழங்கப்படுவதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட சுகாதார பணியாளர்கள் தாங்கள் போடும் ஊசியை அந்த வீடியோவில் காண்பிக்க வேண்டும் என அவர் கூறினார்.

மருந்தில்லாத காலியான தடுப்பூசி போடப்படுவதாக அண்மைய காலமாக சர்ச்சைகள் எழுந்து வருவதை அடுத்து, சந்தேகங்களைத் தவிரக்க அவ்வனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் சொன்னார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather