Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி!

Jul 23, 2021


நாட்டில் COVID-19 தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அவர்களில் 66 விழுக்காட்டினர் முதல் டோசைப் பெற்றுக் கொண்டனர்.

ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி!

நாட்டிலுள்ள  அனைத்து பெரியவர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக தடுப்பூசிகளை போட்டு முடிக்கும் இலக்கை அடைய, தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை தலா 5 லட்சமாக உயர்த்த அரசாங்கம் திட்டமிடுவதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin ஏற்கனவே கூறியிருந்தார்.

அதற்கேற்ப, நேற்று முதல் முறையாக அந்த எண்ணிக்கை பதிவானது.

இதையடுத்து, இதுவரை போடப்பட்டுள்ள டோஸ்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தாண்டியுள்ளது.

தடுப்பூசிக்கு இன்னும் பதிந்துக் கொள்ளாதவர்கள், MySejahtera செயலி அல்லது தடுப்பூசிக்கான அகப்பக்கம் வாயிலாக விரைந்து பதிந்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

 

காலி தடுப்பூசிக்கும் - கள்ளச் சந்தைக்கும் தொடர்பில்லை!

மருந்தில்லா, காலியான தடுப்பூசி போடப்பட்ட சம்பவத்திற்கும், கள்ளச் சந்தைகளில் விற்கப்படும் COVID-19 தடுப்பூசிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

மருந்துடன் கூடிய தடுப்பூசிகளை வெளி ஆட்களுக்கு விற்க ஏதுவாக, தடுப்பூசி போடும் பணியில் ஈடுப்பட்டுள்ள முன்களப் பணியாளர்கள், வேண்டுமென்றே காலியான தடுப்பூசிகளை போடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையும் அமைச்சு திட்டவட்டமாக மறுத்தது.

ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி!

தடுப்பூசி மையங்கள் கடுமையான SOPகளின் கீழ் இருப்பதால், அப்படி எந்த சம்பவமும் நிகழ வாய்ப்பில்லை என அமைச்சு தெரிவித்தது.

 

COVID-19: உயிரிழந்த தம்பதிகளின் பெயர் பட்டியல் வேண்டும்!

COVID-19 தொற்றுக் காரணமாக, உயிரிழந்த தம்பதிகளின் பட்டியலை தயார் செய்யுமாறு சுகாதார அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மரணமடைந்த தம்பதிகளின் பிள்ளைகளுக்கு சமூக நல உதவிகள் முறையாக சென்று சேர்வதை உறுதிச் செய்ய அந்நடவடிக்கை அவசியமாவதாக, துணைப் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி!

நாட்டில் நேற்று 13 ஆயிரத்து 34 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.

அதில் ஆறாயிரத்து 49 சம்பவங்கள் சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்டன.

134 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகினர்.

 

COVID-19 சுயப் பரிசோதனை கருவி!

மேலுமொரு COVID-19 சுயப் பரிசோதனை கருவியை விற்பனைக்கு கொண்டு வர, சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருக்கிறது.

அந்த சுயப் பரிசோதனை கருவிகளை பதிவுப் பெற்ற மருந்தகங்கள்  மற்றும் சுகாதார நிலையங்களில் விற்பனை செய்யலாம் என அமைச்சு கூறியுள்ளது.

 

ஒருவர் மரணம்; மூவர் உடல் நலம் தேறி வருகின்றனர்!

நெகிரி செம்பிலானில், ambulance-சில் போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட, அரசு கிளினிக்கைச் சேர்ந்த 4 சுகாதாரப் பணியாளர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

அவருடன் இருந்த மருத்துவர் உள்ளிட்ட மேலும் மூன்று பேர் மயங்கிக் கிடந்த நிலையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ambulanceசின் ekzos புகைப் போக்கியில் ஏற்பட்டிருந்த கசிவினால் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather