Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: MP-கள் விவாதிக்கலாம்!

Jul 19, 2021


ஜூலை 26ஆம் தேதி தொடங்கி, 5 நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதங்களுக்கும் இடமுண்டு!

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: mp-கள் விவாதிக்கலாம்!

தங்களது கேள்விகளை முன்வைக்கவும், விவாதங்கள் செய்யவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனபிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்துள்ளார்.

அதற்காக சபாநாயகரிடம் இருந்து அனுமதிப் பெற்று, MPகள் தங்களது விவாதங்களை முன் வைக்கலாம்; அவர்களுக்கான நேரத்தை சபாநாயகரே முடிவு செய்வாரென்றும் அமைச்சர் சொன்னார்.

அந்த 5 நாள் சிறப்பு அமர்வு, அரசாங்கத்தின் வெறும் விளக்கக்கூட்டம் தான் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் விளக்கமளித்துள்ளார். 

 

4 நாட்களுக்கு தடை!

அனைத்துலக வாணிப மற்றும் தொழிலியல் அமைச்சு MITI வெளியிட்ட அனுமதி கடிதத்தை பயன்படுத்தி நேற்று தொடங்கி 4 நாட்களுக்கு மாநிலம்  கடந்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிலர் பொது விடுமுறைக் காலத்தில், சொந்த ஊர்களுக்கு திரும்ப, அக்கடிதத்தை தவறாக பயன்படுத்துவது கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதே அதற்கு காரணம் என துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நோன்புப் பெருநாள்  கொண்டாட்டத்தின் போது கூட, இத்தகைய செயல் காரணமாக நாட்டில் 36 புதிய COVID-19 clusterகள் உருவானதை அனைவரும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என Datuk Seri Ismail Sabri Yaakob  கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: mp-கள் விவாதிக்கலாம்!

அதன் விளைவாக, நோன்புப் பெருநாள் காலத்தில் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததை யாரும் மறந்து விட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

எனவே, நாளை ஹஜ் பெருநாளை ஒட்டி மாநிலம் கடந்து பயணிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: mp-கள் விவாதிக்கலாம்!

மற்றொரு நிலவரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாளில், 4 ஆயிரத்து 800க்கும் அதிகமான வாகனங்கள், சாலை தடுப்புச் சோதனைகளின் போது வந்த வழியே திருப்பி அனுப்பட்டன.

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஹஜ் பெருநாள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என Datuk Seri Ismail Sabri சொன்னார்.

 

அதிகமான மரணங்கள்!

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 153 பேர் கொரோனா தொற்றினால் உயிரழந்தனர்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: mp-கள் விவாதிக்கலாம்!

இவ்வேளையில், தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

நேற்று 10 ஆயிரத்து 710 சம்பவங்கள் பதிவாகின; அதில் ஆக அதிகமாக,  4 ஆயிரத்து 828 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.

 

அக்டோபர் மாதத்திற்குள் 100 விழுக்காட்டை எட்ட முடியும்!

பெரியவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசியை முழுமையாகப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இலக்கை அடைய நாளொன்றுக்கு 5 லட்சம் தடுப்பூசி டோஸ்களைப் போட அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: mp-கள் விவாதிக்கலாம்!

அதிக வீரியமுள்ள புது வகை கொரோனா கிருமிப் பரவல் காரணமாக, கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்படுவதாக Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.

 

கொரோனா சுயப் பரிசோதனை கருவிகள்!

COVID-19 தொற்றுப் பீடித்துள்ளதா இல்லையா என்பதை கண்டுப்பிடிக்க உதவும், இரு வகை சுயப் பரிசோதனை கருவிகளை, மலேசியாவில் விற்கவும், விநியோகிக்கவும், சுகாதார அமைச்சு, நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.

அவற்றை பதிவுப் பெற்ற மருந்தகங்கள் அல்லது சுகாதார நிலையங்களில் விற்பனை செய்யலாம் என அமைச்சு கூறியுள்ளது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather