← Back to list
MySejahteraவில் புதிய அம்சம்!
Jul 09, 2021
செப்டம்பர் மாத வாக்கில் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நுழைய முடியும் என சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது.
மாநில Menteri besar அவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த சிலாங்கூரில் சில துணை மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளது.
அந்நிலை விரைவில் மேம்படும் என அவர் சொன்னார்.
தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட இரண்டாம் கட்டத்திற்குச் செல்வதற்கான ஏனைய முக்கியத் தகுதிகளை அடவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றாரவர்.

நாட்டில் புதிதாக ஒன்பதாயிரத்து 180 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரே நாளில் பதிவான மிக உயரிய எண்ணிக்கை அதுவாகும்.
சிலாங்கூரில் மிக அதிகமாக நாலாயிரத்து 400 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், நாட்டில் இதுவரை கிட்டதட்ட பத்து விழுக்காட்டினர் முழுமையாக இரு தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
22 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோசையாவது செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 10.4 மில்லியனுக்கும் அதிகமான Covid-19 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

படுக்கையை விட்டு எழ முடியாமல் இருக்கும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டிருப்பவர்கள், அவர்களுக்கு தடுப்பூசி போட விண்ணப்பிக்கும் புதிய அம்சம் MySejahteraவில் சேர்க்கப்பட்டுள்ளது.
அச்செயலியின் Helpdesk மூலமாக அவ்வாறு செய்யலாம் என தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather