← Back to list
தடுப்பூசிக்கான தேதியைப் பெற குறுக்கு வழி இல்லை!
Jul 05, 2021
COVID-19 தடுப்பூசிக்கான அழைப்பை, விரைந்துப் பெற்றுக் கொள்ள எந்தவொரு குறுக்கு வழியும் இல்லை!
MySejahtera செயலில் உள்ள தடுப்பூசிக்கான help desk வசதியைப் பயன்படுத்தி, தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்கான தேதியை விரைந்துப் பெற்றுக் கொள்ளலாம் என பரவியுள்ள தகவல் குறித்து சுகாதார அமைச்சு பேசியது.
அது ஒரு பொய்த் தகவல் என்பதை அமைச்சு உறுதிப்படுத்தியது.
அந்த help desk பகுதி MySejahtera செயலி வாயிலாக மக்கள் தகவல்களை தெரிந்துக் கொள்ள உருவாக்கப்பட்டது.
அதனை வேறு காரணத்திற்காக பயன்படுத்தி தகவல்கள் அனுப்பத் தொடங்கினால், மக்களுக்கு தேவையான தகவல்களை கொண்டுச் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என அமைச்சு கேட்டுக் கொண்டது.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தேதி கட்டம் கட்டமாக, இயல்பாகவே வழங்கப்பட்டு வருவதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.
PPN: 2ஆம் கட்டம்!
தேசிய மீட்சித் திட்டம் PPNனின் கீழ், 2ஆம் கட்டத்திற்குள் நுழையும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தொடர்ந்து வீட்டில் இருந்தே கல்வி கற்பார்கள்!
ஜூலை 16ஆம் தேதி தொடங்கவுள்ள பள்ளி தவணை விடுமுறை வரை அந்த நடைமுறை நீடிக்கும் என, கல்வி அமைச்சு கூறியது.
விடுமுறை முடிந்து, பள்ளித் மீண்டும் தொடங்க ஒரு வாரம் இருக்கும் போது, அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சு தெரிவித்தது.
2ஆம் கட்டத்தின் கீழ், MKNனின் SOPகளின் படி பார்த்தால், பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம்;
எனினும், அவை முக்கிய தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டிருப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
பகாங், Kelantan, திரங்கானு, பேரா, பெர்லீஸ் ஆகிய 5 மாநிலங்கள் இன்று முதல் PPNனின் கீழ் 2ஆம் கட்டத்திற்குள் நுழைகின்றன.
இரண்டாம் கட்டம் என்பது மேலும் சில தொழில் துறைகள் செயல்பட அனுமதிக்கப்படுவது உள்ளிட்ட தளவுர்கள் வழங்கப்படுவதாகும்.
தகவலை உறுதிப்படுத்துங்கள்!
KL-லில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள 14 பகுதிகளில் வசிப்பவர்கள், எந்த தகவலானாலும், அதனை பணியில் உள்ள காவல் அதிகாரிகளிடம் சரிப்பார்க்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
மக்களுக்கு தவறான தகவல்கள் சென்று சேர்வதை தடுக்க இது அவசியமாவதாக, KL காவல் துறைத் தலைவர் கூறியிருக்கின்றார்.
உதாரணத்திற்கு, COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு கிடைத்தவர்கள், தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல அனுமதி உண்டு;
ஆனால், கையில் இளஞ்சிவப்பு நிற வளையம் அணிந்து, இன்னும் தங்களது கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பவர்களுக்கு அந்த அனுமதி கிடையாது என அவர் தெளிவுப்படுத்தினார்.
பிரதமர் நலமுடன் இருக்கின்றார்!
இரைப்பை குடல் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னின் உடல் நிலை சீராக இருக்கின்றது.
என்றாலும், அவர் இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள வேண்டியிருப்பதாக பிரதமர் துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather