← Back to list
88 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள்!
Jul 04, 2021
Covid-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கான வழிகாட்டி அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு சில தளர்வுகளை வழங்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுவதாக தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin கூறினார்.
அந்த வழிகாட்டியை தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தயார்படுத்தி வருகிறது.
பின்னர் அது தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் கொண்டுச் செல்லப்படும் என அவர் சொன்னார்.
நாடு முழுவதும் இதுவரை 88 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
25 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வேளையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
EMCO எனும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மையங்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்படுவதாக தேசிய காவல் படைத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் சாலைத் தடுப்புச் சோதனைகளின் போது MySejahteraவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள கொடுக்கப்பட்ட தேதி, தடுப்பூசி அட்டை அல்லது குறுஞ்செய்தி ஆகியவற்றை ஆதாரமாகக் காட்ட வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வாகனமோட்டி உட்பட மூவராக வாகனத்தில் செல்லலாம் என்றும் அவர் சொன்னார்.
மக்களவை துணை சபாநாயகர் Datuk Mohd Rashid Hasnon சிலருடன் சேர்ந்து டுரியான் பழ விழாவில் பங்கேற்றது தொடர்பில் காவல் துறை இதுவரை 15 பேரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
அச்சம்பவம் மீதான காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather