← Back to list
ஜூலை ஒன்றில் STPM முடிவுகள்!
Jun 26, 2021
2020 STPM தேர்வு முடிவுகள், ஜூலை ஒன்றாம் தேதி நண்பகல் 12.30 மணி தொடங்கி அறிவிக்கப்படும்!
மாணவர்கள், கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இருந்து அம்முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
அல்லது SMS குறுந்தகவல் வாயிலாகவும் முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என மலேசிய தேர்வு வாரியம் கூறியது.
2 லட்சத்து 15 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டனர்!
COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 70 லட்சம் அதிகமானோர் முதல் மற்றும் 2ஆம் டோசுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நேற்று ஒரு நாளில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதல் டோசைப் பெற்றுக் கொண்டனர்.
67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2ஆம் டோசைப் போட்டு முடித்தனர்.
SOP மீறல்!
இம்மாதம் தொடங்கி இதுவரை, COVID-19 தடுப்பு SOPகளை மீறிய குற்றத்திற்காக, தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஒன்று புள்ளி 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்யும் விதிமுறையை மீறிய குற்றமே அதிகம் பதிவாகியுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள், 60 விழுக்காட்டுக்கும் அதிகமான தங்களது தொழிலாளர்களை, நேரடிப் பணிகளில் உட்படுத்தியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக மனித வள அமைச்சு கூறியது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் செயல்பட ஏதுவாக அனுமதிக் கடிதங்களைப் பெற சில முதலாளிகள் போலித் தகவல்கள் அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
வேலையிட cluster-கள்!
வேலையிடத்தை உட்படுத்திய COVID-19 clusterகளின் எண்ணிக்கை குறைந்தப்பாடில்லை!
ஆகக் கடைசியாக நாட்டில் பதிவான 21 புதிய clusterகளில் 3 மட்டுமே வேலையிடத்தை உட்படுத்தியிருக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவ்வேளையில், நாட்டில் COVID-19 தொற்றுக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது.
ஆகக் கடைசியாக 82 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.
புதிதாக ஐயாயிரத்து 812 பேருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உளவியல் ஆலோசனை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!
நாடு எதிர்நோக்கியுள்ள COVID-19 பெருந்தொற்று முன்களப் பணியாளர்களை மட்டும் அல்ல, மக்களின் மன நலனையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை மட்டும், உளவியல் ஆலோசனை தேடி, சுகாதார அமைச்சுக்கு, சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரத்திற்கும் அதிகமான தொலைப்பேசி அழைப்புகள் வந்திருப்பதே அதற்கு ஆதாராம்.

சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அழைப்புகளில் ஏறக்குறைய 89 விழுக்காடு, வேலை இழப்பு, வருமானப் பாதிப்பு, குடும்ப சச்சரவுகள், விவாகரத்து, உள மற்றும் உடல் ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றை உட்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார்.
இந்தியாவில் போலி தடுப்பூசி போட்ட கும்பல் கைது!
இந்தியாவில் COVID-19 போலி தடுப்பூசிகளை செலுத்தி வந்த தனியார் துறை மருத்துவர்கள் உள்ளிட்ட மோசடி கும்பலொன்றை முறியடிக்கப்பட்டுள்ளது.
மும்பை, Maharashtraவைச் சேர்ந்த ஈராயிரத்திற்கும் அதிகமானோருக்கு இந்த COVID-19 போலி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி என்ற பெயரில் அவர்களுக்கு வெறும் உப்பு நீரை அக்கும்பல் ஊசி வழி செலுத்தி வந்துள்ளது.
கொல்கத்தாவிலும் இதே போன்று மக்களுக்கு போலி தடுப்பூசிகளைப் போட்டு வந்த ஆடவர் கைதாகியுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather