← Back to list
அறிகுறி இல்லாத COVID-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளன!
Jun 23, 2021
நாட்டில் பரவும் பெரும்பாலான sporadik சம்பவங்கள், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருக்காதவர்களை உட்படுத்தியிருக்கின்றது.
இதனால் தான், SOPகளை முறையாக பின்பற்றாத பட்சத்தில், COVID-19 தொற்று மிக எளிதில் பரவுவதாக, பொது சுகாதார மருத்துவ நிபுணர் Dr Mohamad Hazizi Mohamad Hasani கூறுகின்றார்.
எனவே, SOPகளை பின்பற்றும் அதே வேளை, கொரோனா தொற்றில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சுயக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
முழு பொது முடக்கம் அமுலுக்கு வந்து 3 வாரங்கள் ஆகி விட்ட நிலையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் எந்த clusterகளுடனும் அறவே தொடர்பில்லாமல், அறிகுறிகளும் காட்டாமல், யாரை வேண்டுமானாலும் தொற்றக் கூடிய கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியிருந்தது.
அது ஏறக்குறைய 69 விழுக்காடு வரை இருப்பதாக அமைச்சு முன்னதாக தகவல் வெளியிட்டது.
மிக அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்!
நாட்டில் நேற்று ஒரு நாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக பதிவாகியுள்ளது.
மொத்தமாக 2 லட்சத்து 50 ஆயிரத்து 529 பேர் நேற்று தடுப்பூசிப் போட்டுக் கொண்டனர்.
அவர்களில், ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதல் டோசைப் பெற்றுக் கொண்டனர்.
60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2ஆம் டோசைப் போட்டு முடித்தனர்.
செலவுபடித் தொகை உயர்வு!
COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்த நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் தன்னார்வலர்களுக்கான அன்றாட செலவுபடித் தொகை, 50 ரிங்கிட்டில் இருந்து நூறு ரிங்கிட்டுக்கு உயர்த்தப்படுகிறது.
நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றுபவர்களுக்கு அத்தொகை வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
பொய்த் தகவல்!
COVID-19 தடுப்பூசி போட்டப் பிறகு டுரியான் பழம் சாப்பிட்டதால், ஆடவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக கூறி Whatsappபில் பகிரப்பட்டு வரும் தகவல் பொய்யானது!
எனவே அதனை யாரும் நம்பவும் வேண்டாம், மற்றவர்களுக்கு பகிரவும் வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரித்திருக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் முன்பும் - பின்பும் யாரும் டுரியான் பழத்தை சாப்பிட வேண்டாம் என கூறி, அந்தப் பொய்த் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.
குழந்தைக்கு மதுபானம் கொடுத்த நபர் கைது!
பினாங்கு Balik Pulauவில், 5 மாதக் கைகுழந்தைக்கு மதுபானத்தைக் குடிக்க கொடுத்ததாக நம்பப்படும் ஆடவர் விசாரணைக்காக கைதான வேளை, அக்குழந்தை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather