← Back to list
நெகிரி செம்பிலானிலும் அதிகமான சம்பவங்கள்!
Jun 17, 2021

நாட்டில் புதிதாக ஐயாயிரத்து 738 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 858 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வேளையில் நெகிரி செம்பிலானிலும் மிகக் கூடுதலாக நான்கு இலக்க எண்ணில் ஆயிரத்து 86 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
KL, சரவாக், ஜொகூரிலும் கூட அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பெர்லிசில் புதிய சம்பவம் ஏதுமில்லை.

Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் முழுமையாக இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
சிலாங்கூர், சரவாக், ஜொகூர், பேரா மற்றும் KLலில் அதிகமானோருக்கு இரு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
ஒட்டு மொத்தமாக இதுவரை 51 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இவ்வேளையில், இதுவரை 1 கோடியே 40 லட்சம் பேர் தடுப்பூசி போட பதிந்துக் கொண்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டுக்கான SPM மற்றும் STPM தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கும் பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் COVID-19 தடுப்பூசி போடும் பரிந்துரை ஆராயப்படுவதை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.
முக்கியத் தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்குவது அவசியம் என NUTP வலியுறுத்தியது.
தடுப்பூசி பெறத் தயார்படுத்தும் வகையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையானத் தரவுகளைத் தற்போது மேம்படுத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.
இதனிடையே பெரிய எண்ணிக்கையிலானோருக்கு தடுப்பூசி போட வசதியாக இருக்கும் என்பதால், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என NUTP மேலும் கூறியது.

நாட்டில் கட்டுமானத் துறையில் உள்ள கிட்டதட்ட 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு Covid1-9 தடுப்பூசி போட்டுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
பொருளாதாரத்துறையைச் சேர்ந்த முன் வரிசைப் பணியாளர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் பொருட்டு அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுப்பணி அமைச்சு கூறியது.
அத்தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்; ஆயினும் தடுப்பூசி போடும் இடத்தைத் தயார்படுத்திக் கொடுப்பதோடு தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கான செலவுகளை முதலாளிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அது விளக்கியது.

சமையல் எண்ணெய்க்கான புதிய விலையை உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு அடுத்த வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டுச் சந்தையில் 5 கிலோகிராம் சமையல் எண்ணெய் 30 ரிங்கிட் வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்திருப்பதை அடுத்து புதிய விலையை நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather