← Back to list
KLலிலும் MCO!
May 05, 2021

நாட்டில் புதிதாக மூவாயிரத்து 744 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 548 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கிளந்தானிலும் சரவாக்கிலும் கூட அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் 17 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 591 ஆக உயர்ந்துள்ளது.

KL மற்றும் சிலாங்கூருக்குப் பிறகு, AstraZeneca தடுப்பூசி போடுவதில் Covid-19 சம்பவங்கள் அதிகமுள்ள சிவப்பு மண்டல மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் நான்காவது கட்டத்தில் கீழ் பட்டியலிடுவதற்கு மாநிலங்களின் தேர்வு, தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அவர் சொன்னார்.
AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொள்ள KLலையும் சிலாங்கூரையும் சேர்ந்த 2 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடையாள அட்டையிலும் MySejahtera செயலியிலும் வெவ்வேறான முகவரிகள் பதிவு செய்யப்பட்டதால்தான் சிலருக்கு AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான அழைப்பு குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin அதனைத் தெரிவித்துள்ளார்.
அப்பிரச்னையைக் களைய சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசவிருப்பதாக தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அவர் சொன்னார்.
இவ்வேளையில் நாடு முழுவதும் இதுவரை 98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள உணவகங்களிலும் தங்கும் விடுதிகளிலும் dine-in அல்லது அமர்ந்து உண்ண நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது.
அதே சமயம் உணவகங்கள், மளிகைக் கடைகள், எண்ணெய் நிலையங்கள் ஆகியவை காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே செயல்பட முடியும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இவ்வேளையில் தற்போது நடத்தப்படும் ரமலான் சந்தைகள் சனிக்கிழமை வரை மட்டுமே செயல்பட முடியும். 
எனினும் நோன்புப் பெருநாள் சந்தைகளும் பிற சந்தைகளும் MCO காலம் நெடுகிலும் கடுமையான தர செயல்பாட்டு நடைமுறைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. 
சிலாங்கூரில் ஆறு மாவட்டங்களில் நாளை முதல் MCO அமலுக்கு வரும் நிலையில் இப்புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   

மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளையும் நாளை மறுநாளும் மூடப்படவுள்ளன.  
அடுத்த வாரம் நோன்புப் பெருநாள் விடுமுறை தொடங்கும் நிலையில், நேரடி வகுப்புகளை நடத்த இரு தினங்களே எஞ்சியுள்ளதைச் சுட்டிக் காட்டி மாநில கல்வித்துறை சுற்றறிக்கை வழி அதனைத் தெரிவித்துள்ளது. 
பள்ளிகள் மூடப்படும் தினங்களில் வீட்டில் இருந்து மாணவர்கள் கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை பள்ளிகள் உறுதிச் செய்ய வேண்டும் என அது கேட்டுக் கொண்டது. 

கோலாலம்பூரில் வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து மே 20 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமல்படுத்தப்படுவதாக தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நாளை முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 சென்னாக நிலை நிறுத்தப்படுகிறது.
RON97 இரண்டு சென் அதிகரித்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 60 சென்னுக்கு விற்கப்படும்; டீசல் விலையில் மாற்றமில்லை.
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather