← Back to list
கவலை வேண்டாம்!
Apr 26, 2021
நாட்டில் கல்வி துறையை உட்படுத்தி உருவாகி வரும் COVID-19 clusterகள் குறித்து பெற்றோர்கள் கவலைக் கொள்ள வேண்டாம்!
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு அவ்வாறு கூறியிருக்கின்றது.
பள்ளிகளில் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கு எழுந்துள்ள கவலையை புரிந்துக் கொள்ள முடிகின்றது; 
ஆனால், கல்வி அமைச்சு வாயிலாக பள்ளிகளில் COVID-19 தடுப்பு SOPகள் முறையாக பின்பற்றப்படுவதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிச் செய்யும் என அமைச்சர் Datuk Seri Rina Mohd Harun உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார்.
சரவாக், Kelantan, ஜொகூர், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் COVID-19 சம்பவங்கள் காரணமாக சில பள்ளிகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டிருப்பது குறித்து அவர் பேசினார்.

இவ்வேளையில், நாட்டில் ஆகக் கடைசியாக பதிவான 8 புதிய COVID-19 clusterகளில், மூன்று clusterகள் கல்வித் துறையை உட்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றில் இரு clusterகள் சிலாங்கூரிலும், மற்றொன்று Kelantanனிலும் பதிவாகியுள்ளது.
எஞ்சிய clusterகள், வேலையிடம், சமூக நிகழ்ச்சி மற்றும் தடுப்பு மையத்தை உட்படுத்தியிருப்பதாக அமைச்சு கூறியது.
 
தினசரி COVID-19 சம்பங்கள் எண்ணிக்கை தொடர்ந்து ஈராயிரத்தை தாண்டியுள்ளது!
நாட்டில் புதிதாக ஈராயிரத்து 690 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 10 பேர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதில் ஆக அதிகமாக 751 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன; அதற்கடுத்து சரவாக்கும், Kelantanனும் அதிகமான சம்பவங்களை கொண்டுள்ளன.
இன்னும் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்களா? 
சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசிப் போட்டுக் கொண்ட மலேசியர்களை, நோன்புப் பெருநாளுக்கு மலேசியாவுக்கு திரும்ப அனுமதிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுகின்றது! 

தடுப்பூசி போட்ட மலேசியர்களுக்கு சிறப்புப் பயண அட்டை வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படுவதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்தியாவுக்கு உதவி அனுப்பும் பிரிட்டன்!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 15 முதல் 45 வயதுடையவர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மே ஒன்றாம் தேதிக்கு பிறகு, இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படுவதால், தடுப்பூசி மையங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க இந்த முன்னேற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வேளையில், COVID-19 பெருந்தொற்றுடன் மிக மோசமாக போராடி வரும் இந்தியாவுக்கு உதவுவதற்காக, Oxygen கலன்கள் உள்ளிட்ட 600க்கும் அதிகமான மருத்துவ உபகரணங்களை, பிரிட்டன் அந்நாட்டுக்கு அனுப்புகின்றது.
 
 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather