← Back to list
மூன்றாவது நாளாக தொடர்ந்து ஈராயிரம் சம்பவங்கள்!
Apr 18, 2021
 

தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று ஏராயிரத்துக்கும் அதிகமான Covid-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன!
நேற்று ஈராயிரத்து 331 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் அத்தொற்றிலிருந்து பூரண நலமடைந்துள்ள வேளை, ஐந்து புதிய மரணங்கள் பதிவாகியிருக்கின்றன.
-----
கிளாந்தானில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த எல்லா பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன!
பள்ளிகளில் Covid-19 தொற்று பரவல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, அம்முடிவு எடுக்கப்பட்டதாக மாநில கல்வித் துறை தெரிவித்தது.
மூடப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் வீட்டிலிருந்த படியே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
----- 
நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 11 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான டோஸ் Covid-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!
ஆக அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தில் 97 ஆயிரத்துக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 36.40 விழுக்காடாக அதாவது 89 லட்சத்தையும் தாண்டியுள்ளது.
----- 
சிலாங்கூர் PJ-வில் தனது முன்னாள் பாதுகாவலர்களை இழிவுப்படுத்திய முதலாளி, தனது அந்நடவடிக்கைக்காக பொது மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, நோன்பு இருந்ததற்காகத் தனது அந்த இரு முன்னாள் ஊழியர்களையும் சம்பந்தப்பட்ட முதலாளி, அடித்துக் காயப்படுத்தியதோடு, அவர்களை இழிவுப்படுத்தியதற்காகக் கைதாகினார்.
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather