← Back to list
சாலைத் தடுப்புச் சோதனைகள் அதிகரிக்கப்படலாம்!
Apr 07, 2021

நாட்டில் Covid-19 கிருமித் தொற்றுக்கு மேலும் நால்வர் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் புதிதாக ஆயிரத்து 139 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சரவாக்கில் மிக அதிகமாக 332 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
தொடர்ந்து சிலாங்கூரிலும் ஜொகூரிலும் கூட அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனிடையே பெர்லிசிலும் புத்ராஜெயாவிலும் புதிய சம்பவம் ஏதும் இல்லை.

நாடு முழுவதும் சாலைத் தடுப்புச் சோதனைகளை அதிகரிக்க Bukit Aman பரிசீலித்து வருகிறது.
குறுக்குப் பாதைகளிலும் கண்காணிப்புப் பணிகள் மேம்படுத்தப்படும்.
புனித ரமலான் மாதக் கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் மாநில எல்லைகளைக் கடக்காமல் இருப்பதை உறுதிச் செய்வதே அதன் நோக்கமாகும்.

Covid-19 பரவலைத் தடுக்க கடுமையான தர செயல்பாட்டு நடைமுறைகளுடன் சிறைச் சாலைகளில் கைதிகளைச் சந்திக்க முன் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சிறைச் சாலைத்துறையின் இணைய அகப்பக்கம், தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் அல்லது கடிதம் வாயிலாக கைதிகளின் குடும்பத்தினர் அவர்களைச் சந்திக்க முன் பதிவு செய்யலாம்.
சந்திப்பு தேதி பின்னர் நிர்ணயிக்கப்படும் என சிறைச்சாலைத்துறை தெரிவித்தது.

 
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ள சமூக நலத்துறையின் கீழ் உடனடியாக பதிந்து கொள்ளுமாறு மாற்றுத் திறனாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 
நாடு முழுவதும் சுமார் 47 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கிட்டதட்ட 6 லட்சம் பேர் மட்டுமே பதிந்து கொண்டுள்ளதாக Sentral மாற்றுத் திறனாளிகள் சங்கம் கூறியுள்ளது. 

PKR தலைவர் Datuk Seri Anwar Ibrahimமை அண்மையில் தாம் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு உரையாடியதாகக்  கூறப்படுவதை அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi மறுத்திருக்கிறார்.
கடந்த மாத அம்னோ பொதுப் பேரவைக்குப் பின் தமக்கும் Anwarருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் எனக் கூறி குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது தொடர்பில் அவர் அவ்வாறு சொன்னார்.
காவல் துறையினர் விசாரணை நடத்த ஏதுவாக அவ்விவகாரம் குறித்து தமது தரப்பு புகார் அளிக்கவிருப்பதாக Zahid மேலும் கூறினார்.

நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON97 பெட்ரோலின் விலை 2 சென் அதிகரித்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 54 சென்னுக்கு விற்கப்படும்.
RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 சென்னாகவும் டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாகவும் நீடிக்கிறது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather